Watch Video: இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசு வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி வீடியோ
திருவிழாவுக்காக வாங்கப்பட்ட பட்டாசு வெடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் குழி இருசாயி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் ஒருபகுதியாக இன்று காலை வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இடைப்பாடி, இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசு வாங்கிக்கொண்டு கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது வானத்தில் வெடித்து சிதறிய தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதில் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
சேலத்தில் கோவில் விழாவிற்காக வாங்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் இருவருக்கு பலத்த தீக்காயம்.
— Kelikaimanidhan (@Sathishsv1906) February 12, 2024
திருவிழாவுக்காக வாங்கப்பட்ட பட்டாசு வெடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. pic.twitter.com/QlarRx6g5x
அதேபோல் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கவின் ஆகிய பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பட்டாசு வெடி விபத்தில் தீக்காயமடைந்த இருவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் முதல்வர் மணியிடம் கேட்டபோது, திருவிழாவின் போது பட்டாசு வெடி விபத்தில் சக்திவேல் மற்றும் கவின் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சக்திவேல் என்பவருக்கு 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
திருவிழாவுக்காக வாங்கப்பட்ட பட்டாசு வெடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















