மேலும் அறிய

சாக்லேட் கொடுத்து குழந்தைகளுடன் கலந்துரையாடிய சேலம் ஆட்சியர்

பள்ளிக் குழந்தைகளிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவரது அறையில் அழைத்து மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ரோஜா பூ, சாக்லேட் கொடுத்து வாழ்த்தினார்.

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் அழைத்துவரப்பட்டு எவ்வாறு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது என்பது குறித்து குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது.

சாக்லேட் கொடுத்து குழந்தைகளுடன் கலந்துரையாடிய சேலம் ஆட்சியர்

பொதுமக்களின் பிரச்னைகளை எவ்வாறு அரசு ஊழியர்கள் கையாளுகிறார்கள்? அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது? என்பது குறித்து குழந்தைகள் முன்னிலையில் மனுக்கள் பெற்றுக்கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு ஒவ்வொரு துறைக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் மேனகா பள்ளி குழந்தைகளுக்கு விளக்கினார். வருங்காலங்களில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசுப் பணி ஏற்கும்போது மக்களின் பிரச்னைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொள்ளும் வகையில் இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. 

பின்னர் பள்ளிக் குழந்தைகளிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவரது அறையில் அழைத்து மாணவ, மாணவிகளுக்கு  ரோஜா பூ, சாக்லேட் கொடுத்து குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் கூறினார்.  அதன்பின் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது குழந்தைகள் மக்கள் குறைதீர் கூட்டத்தை பார்வையிட்டது பற்றி கேட்டறிந்தார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பதிலளித்தார். தொடர்ந்து குழந்தைகளிடம் உரையாற்றிய அவர், அரசு பள்ளியில் பயின்று பல அலுவலகங்களில் பணியாற்றி இன்று சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ளேன். இதேபோன்று நீங்களும் பிற்காலத்தில் அதிகாரிகளாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். 

சாக்லேட் கொடுத்து குழந்தைகளுடன் கலந்துரையாடிய சேலம் ஆட்சியர்

பின்னர் மாவட்ட ஆட்சியர் அறையில் மாணவர்கள் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி பாடல்களை பாடியும், அவரது பெருமை குறித்தும், எதற்காக குழந்தைகள் தினமாக அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுவது என்பது பற்றியும் பேசினர். அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவசர கண்காணிப்பு அறை, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் அறை, வீடியோ கலந்தாய்வு அறை, கூடுதல் ஆட்சியர் அறை உட்பட பல்வேறு அறைகளில் நடக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவர்களிடம் விளக்கினார். 

இதைப் பற்றி மாணவர்கள் கூறுகையில், முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வரப்பட்டு அனைத்து துறை பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அமர வைத்து அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எங்களை அவசர கண்காணிப்பு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு நடக்கும் பணிகள் குறித்து பொறுமையாக விளக்கினார். இந்த அனுப்பவும் புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
Embed widget