மேலும் அறிய

இறைச்சிக்காக கண்ணி வைத்து திருடப்படும் நாட்டு மாடுகள் - புகார் அளித்தும் பலனில்லை என வளர்ப்போர் வேதனை

பத்தாண்டுகளாக பட்டி மாடு திருடு போவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்று நாட்டு மாடு வளர்ப்போர் வேதனை.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ளது குரால் நத்தம். இந்த பகுதியில் ஜருகுமலை அமைந்துள்ளது. குரால் நத்தம், சூரியூர் மற்றும் கம்மாளப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி, தாங்கள் வளர்த்து வரும் நாட்டு இன மாடுகளை ஜருகுமலை மற்றும் பனமரத்துப்பட்டி ஏரியில் மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் சுமார் 30 முதல் 50 மாடுகள் வரை பட்டி அமைத்து அவற்றை தங்கள் விவசாய நிலங்களில் பராமரித்து வருகின்றனர்.

இறைச்சிக்காக கண்ணி வைத்து திருடப்படும் நாட்டு மாடுகள் -  புகார் அளித்தும் பலனில்லை என  வளர்ப்போர் வேதனை

 நாட்டு இன மாடுகள் என்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை ஆவதால் நுகர்வோர் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து பாலை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் ஏழை விவசாயிகள் தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாங்கள் வளர்க்கும் நாட்டு இன பட்டி மாடுகள் அடிக்கடி காணாமல் போவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடுகளை மாலையில் எண்ணிப் பார்க்கும்போது குறைந்து போவது குறித்து அவர்கள் கவலை அடைந்தனர். இது தொடர்பாக மேய்ச்சலுக்கு மாடுகள் செல்லும் பாதையில் விவசாயிகள் சென்று பார்த்தபோது காணாமல் போன மாடுகளின் தலை கால் மற்றும் வீசி எறியப்பட்ட இறைச்சித் துண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இறைச்சிக்காக கண்ணி வைத்து திருடப்படும் நாட்டு மாடுகள் -  புகார் அளித்தும் பலனில்லை என  வளர்ப்போர் வேதனை

இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் பட்டி மாடு வளர்ப்போர், 10 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டி மாடுகளை குறிவத்து கயிறு மூலம் கண்ணி வைத்து மாடுகளை பிடித்து பனமரத்துப்பட்டி ஏரிக்குள் வைத்து வெட்டி அவற்றை மாட்டிறைச்சி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். ஒவ்வொரு மாடும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மதிப்பு உள்ளது. இதுவரை 15 மாடுகளை அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் கண்ணி வைத்து பிடித்து, ஏரிக்குள் வைத்து கொன்று இறைச்சியாக மூட்டை கட்டி விற்பனை செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு ரக மாட்டினங்கள் அழிந்து வரும் சூழலில் இதுபோல் இறைச்சிக்காக கடத்தப்பட்டு மாடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget