மேலும் அறிய

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை, காப்பாற்ற சென்ற தாய் - சேலத்தில் நேர்ந்த சோகம்

குழந்தை சுபஸ்ரீக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் தாயும், சேயும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அடுத்துள்ள மாசிநாயக்கன்பட்டி வாத்தியார் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத். ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மீனா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், நேற்று வினோத் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் மாமியார் செல்வி மற்றும் மீனா அவரது குழந்தை சுபஸ்ரீ ஆகிய மூவர் இருந்துள்ளனர். அப்போது தென்னம்தோட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக மீனா குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குழந்தை தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது. பதறிப்போன தாய் மீனா, குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். மீனாவிற்கு நீச்சல் தெரியாத நிலையில் தாயும், சேயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடனே இதுதொடர்பாக மாமியார் செல்வி உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை, காப்பாற்ற சென்ற தாய் - சேலத்தில் நேர்ந்த சோகம்

தகவலின்பெயரில் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தாய், சேய் இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த மனைவியையும், குழந்தையையும் பார்த்து கணவர் வினோத் மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.  இன்று குழந்தை சுபஸ்ரீக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் தாயும், சேயும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Embed widget