மேலும் அறிய

Salem Central Jail: சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து ஒரே மாதத்தில் 6 செல்போன் பறிமுதல்

நடப்பு மாதத்தில் (மே) மட்டும், சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதி படைத்த கைதிகள், மிக ரகசியமாக செல்போன்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதன்பேரில், அவ்வப்போது சிறை சோதனைக்குழு காவலர்கள், அதிரடி சோதனையை நடத்தி செல்போன், சார்ஜர்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதில், கடந்த 3 நாட்களுக்கு முன் குமரகுரு என்ற கைதி, தனது உடலில் ஆசனவாயில் பகுதியில் செல்போனை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்து விசாரித்ததில், வசதி படைத்த கைதிகளுக்கு உதவும் வகையில், செல்போனை ஆசனவாயில் பகுதியில் பதுக்கி வைத்து, தேவைப்படும்போது அவர்களுக்கு எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், நாமக்கல்லை சேர்ந்த கைதி பிரவீன் (22) என்பவர், ஆசனவாயில் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மற்றொரு செல்போனை சிறை காவலர்கள் மீட்டனர். 

Salem Central Jail: சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து ஒரே மாதத்தில் 6 செல்போன் பறிமுதல்

விசாரணையில் அவரிடம் ராஜ்குமார் என்ற மற்றொரு கைதி, செல்போனை கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. சிக்கன் உள்ளிட்ட நல்ல சாப்பாட்டிற்காக இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிந்தது. நடப்பு மாதத்தில் (மே) மட்டும், சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதும், அதனை பதுக்கி வைத்திருந்த கைதிகள் மீது, அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமும் கைதிகள் பிரவீன், ராஜ்குமார் மீது ஜெயிலர் மதிவாணன் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் மீது இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கினால், உடனடியாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதனை பதுக்கிய கைதிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம், சிறைக்குள் இந்த செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது வார்டன்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலம் சிறை காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget