மேலும் அறிய

தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் கனமழையால் நிரம்பியுள்ளது.

தொடர் மழையால் பஞ்சப்பள்ளி சின்னார் அணையில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், கிராமப் புறங்களிலும் வயல்வெளியில் நுழைந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி வந்தது. இந்நிலையில் தொடரும் நீர் வரத்தால் அணையிலிருந்து வினாடிக்கு 4500 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி,  தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு சில ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சின்னாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இதனால் நள்ளிரவு சின்னாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்தது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் நள்ளிரவு 2 மணிக்கு அணையில் உள்ள எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க விட்டு கிராம மக்களுக்கு ஆற்றோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வருவாய்த் துறையினர் உடன் இணைந்து அனைவரும் ஒட்டியுள்ள கரகூர், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தனர்.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னார் அணையில் வினாடிக்கு 28,000 கன அடி நீர்வரத்தால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளுக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் மூழ்கி அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் நுழைந்தது. இதனால் கிராம பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கட்டடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் ஆற்றோரமுள்ள வாழை, நெல், மஞ்சள், தக்காளி உள்ளிட்ட பயிர்களை அடித்துச் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த பகுதியில் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றோரம் கொட்டி வைத்திருந்த 50,000 தேங்காய்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இதனால் விவசாயிகளுக்கு சுமார் 5 இலட்சம் ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குரியது வருகின்றனர்.  தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வருவாய்த் துறையினரும், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் பயிர்களின் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதிப்பை முழுமையாக அடையாளம் காண முடியாமல் வருவாய்த் துறையினர் தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கினை இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்து, மகிழ்ந்து வருகின்றனர்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget