மேலும் அறிய

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

சிறைக்கு வரும் கைதிகளின் உறவினர்கள் சிறைத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று எளிதில் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் உள்பட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உறவினர்கள் வாரத்தில் 5 நாட்கள் பார்க்கலாம். 3 நாட்கள் விசாரணை கைதிகளையும், மற்ற 2 நாட்கள் தண்டனை மற்றும் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளையும் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

ஒரு கைதியை பார்க்க 3 பேருக்கு அனுமதி மட்டும் அளிக்கப்படுகிறது. பார்க்கவரும் உறவினர்கள் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதை வைத்து பார்க்க வருவோரின் புகைப்படங்களும் உடனடியாக எடுக்கப்பட்ட பிறகே கைதிகளை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை புழல் சிறைக்கு கைதிகளை பார்க்க தினமும் 600 பேர் வருகின்றனர். கோவை சிறையில் 300 பேரும், சேலம் சிறைக்கு 150 பேரும் வருகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகிறது. சிலர் தங்களது குழந்தைகளை அழைத்தும் வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், சென்னை புழல் 2 சிறையில் புதிய நடைமுறையான புக்கிங் வசதி அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த எண்ணுக்கு கைதியை எப்போது பார்க்க வருகிறோம், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர். எந்த வழக்கில் கைதாகியுள்ளார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அதனை சிறை வார்டர்கள் பதிவு செய்து கொள்வார்கள். உடனடியாக எத்தனை மணிக்கு வரவேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும். கைதியை சிறையில் சந்திக்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக சிறைக்கு வரவேண்டும். வந்த பிறகு அவர்களின் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடக்கும். இதன் மூலம் பல மணி நேரம் காத்துக்கிடப்பது தவிர்க்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வரும்போது, எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் பார்த்து செல்கிறார்கள். இந்த முறை கைதிகளின் உறவினர்களுக்கு எளியதாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

இந்த முறையை அனைத்து மத்திய சிறைகளிலும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையில் இருந்தும் 3 வார்டன்கள் சென்னை புழல் 2 சிறைக்கு சென்றுள்ளனர். செயல்படுத்தப்படும் வழி முறைகளை தெரிந்த பிறகு அனைத்து மத்திய சிறையில் இந்த புக்கிங் முறை அமலுக்கு வரும்.

இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், "ஒவ்வொரு மத்திய சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க உறவினர்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கிறார்கள். இவர்களில் சிலர் குழந்தைகளை எடுத்து வந்து காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது. சில இடங்களில் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போன்மூலம் புக்கிக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாக இருப்பதால் அனைத்து சிறைகளிலும் விரைவில் புக்கிங் வசதி கொண்டுவரப்படும்," என்று கூறினார்.

மேலும் சேலம் மத்திய சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் முன்பதிவு செய்து பார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த முறை நடைமுறைக்கு வரும் என சிறைத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Embed widget