மேலும் அறிய

Minister EV Velu: எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது- பாமக மீது அமைச்சர் எ.வ.வேலு தாக்கு

காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பாமகவினர் பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பாமகவிற்கு பதில் அளித்தார்.

1999 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் 100 இடங்களில் உழவர் சந்தைகளை கொண்டு வந்தார். சேலம் மாவட்டத்தில் அப்போதைய அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மாவட்டத்தில் 9 இடங்களில் உழவர் சந்தையை ஏற்படுத்தினார். தற்போது உழவர் சந்தை தொடங்கி 25 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப அணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர்

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று விவசாயிகளிடம் விற்பனை குறித்து கேட்டு அறிந்தனர். 

Minister EV Velu: எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது-  பாமக மீது  அமைச்சர் எ.வ.வேலு தாக்கு

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இன்று 25வது ஆண்டு நறைவடைந்ததையொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன. விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். அவர்களிடம் கேட்டபோது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமையோடு சொல்லுகிறார்கள். அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 2021- 2022 ஆம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து 2022 - 2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் நீர் வள துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகன் நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது என்றார்.

Minister EV Velu: எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது-  பாமக மீது  அமைச்சர் எ.வ.வேலு தாக்கு

பாமக விவசாயிகள் மாநாட்டில் அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு, தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பாமக தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒருக்குகிறோம். அதற்கான செலவு செய்யப்படுகிறது. ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பாமகவிற்கு பதில் அளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரூஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரூஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரூஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரூஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
Embed widget