Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு! காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - முழு விவரம்!
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக 20அடியாக நீடிக்கிறது, காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று 6வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 28,500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 6000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 24,000 கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அணைகளுக்கு வரும் நீர், அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
நீர்திறப்பையொட்டி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைவதுவுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10:00 மணிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து குறைந்து மாலை, 5:00 மணிக்கு, 24,000 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உட்பட அருவிகளில், தண்ணீர் சீராக கொட்டியது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.





















