மேலும் அறிய

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

ஒரூர் பகுதியில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தாமோதரன் (60) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஓட்டலின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிவிட்டு, காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து, ஓசூர் மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனை வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆணைக்கல் பகுதியை சேர்ந்த அப்ரித் (23), மத்திகிரி பகுதியை சேர்ந்த தோஷிப் (20), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் தனியார் ஓட்டல் காவலாளியின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், அப்ரித் மீது ஓசூர், மத்திகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள் அப்ரித் தோஷிப் மற்றும் சிறுவன் ஆகியோர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். 

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

இந்த விசாரணையில், அப்ரித், தோஷிப், 16 வயது சிறுவன் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி உள்ளனர். இந்நிலையில், கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால், கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.அதன்படி, அங்கிருந்து கிளம்பி ஓசூர் நோக்கி வந்துள்ளனர் அப்போது சாலையோரம் உள்ள ஓட்டலில் திருட முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, 16 வயது சிறுவனை வாசலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு ஓட்டலின் மேற்கூரை பிரித்து அப்ரித், தோஷிப் உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா ஓயரை பிடிங்கி விட்ட அவர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருட முயன்றனர். ஆனால் அதனை எடுக்க முடியாததால் அருகே இருந்த கத்தியை வைத்து நெம்பினர்.

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அப்போது, கல்லா அருகே படுத்திருந்த காவலாளி சத்தம் கேட்டு எழுந்து விடுவார் என எண்ணி அங்கிருந்த கத்தியால் அப்ரித், காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்துள்ளான். அதனைத்தொடர்ந்து, கல்லாவை உடைத்து அதில் இருந்த 79,500 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 3 நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அம்ரித், தோஷிப், ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், 16 வயது சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். ஓட்டலில் நகை பணம் கொல்லை அடிக்க சென்ற இடத்தில் காவலாளி கத்திவிடுவாரோ என பயந்து காவலாளியை கத்தியால் குத்தியால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget