மேலும் அறிய

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கிருஷ்ணகிரியில் 2544 பொறுப்பாளர்கள் - பீலாராஜேஷ் பேட்டி

’’கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுரைகள் வழங்க பட்டுள்ளது’’

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பீலா ராஜேஷ் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எதிர் வரக்கூடிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

கூச்ச சுபாவம் To ஆட்கொல்லி.. காடும் மனிதனும்.. இயற்கை சொல்லும் புலிகளின் கதை..! #ManEater #Tiger

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கிருஷ்ணகிரியில் 2544 பொறுப்பாளர்கள் - பீலாராஜேஷ் பேட்டி

 

செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதனடிப்படையில் மாவட்டத்தில் 35 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. 47 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, 2544 முதல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 158 பாம்பு பிடிக்கும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அரசின் சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி மாவட்டத்தில் 90% சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுரைகள் வழங்க பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்நிலைகளில் பொதுமக்கள் சிறுவர்கள் ஆற்றில் குளிக்கவோ குளத்தில் இறங்க கூடாது என தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகள் உள்ள இடங்களில்  அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கிருஷ்ணகிரியில் 2544 பொறுப்பாளர்கள் - பீலாராஜேஷ் பேட்டி

குறிப்பாக நெடுஞ்சாலை துறை மூலமாக மரங்கள் விழும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற தேவையான அளவிற்கு பணியாளர்களும் ஜேசிபி வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் செவிலியர்கள் முழு பணியில் ஈடுபட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி திட்ட அலுவலர் தேன்மொழி சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோவிந்தன் ஓசூர் சார் ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget