மேலும் அறிய

Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை - காங்கிரஸ் புதிய விளக்கம்

கச்சத்தீவுக்கு மாற்றாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடல் நிலத்தை பெற்றோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில் பேட்டி.

நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரை வார்த்து விட்டது. அதை மீட்பதே எங்கள் இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு. ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியா, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும் அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது.

Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை - காங்கிரஸ் புதிய விளக்கம்

இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார். அதாவது வங்களா விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை வரையறை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். அப்போதுதான் இலங்கை அரசு கச்சத்தீவு விவகாரத்தை முன் வைத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். சும்மா ஒன்றும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவது தான் உடன்படிக்கை. அதன்படி 1974 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் எது பலனளிக்கும் என்ற தொலைநோக்கில் கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு மாறாக 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மன்னார் வளைகுடா - வங்காள விரிகுடா கடல் எல்லை வரையறை செய்யப்பட்டு, wadge bank என்ற பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டது. அந்த பகுதி கிட்டத்தட்ட 10,000 சதுர கிலோமீட்டர் கொண்ட கடல் நிலப்பரப்பு. கன்னியாகுமரியின் தெற்கே கடல் பகுதியை கடலுக்குள் இந்திய அரசால் மூழ்கி எடுத்துக் கொள்ளப்பட்டது.

அது இன்று 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பகுதியாக உள்ளது. வெறும் 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட 25 லட்சம் ஏக்கரை கடலில் இந்தியா எடுத்துள்ளது. இதுதான் அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை. அந்த கடல் நில பரப்பில் 60க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் உள்ளன. அந்த பகுதியை பயன்படுத்தி தான் கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் கேரள மாநில மீனவர்கள் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பேசி வருகிறார்கள். அவர்களது பேச்சில் உண்மை இல்லை. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs SRH LIVE Score: அதிர்ச்சியில் ஹைதராபாத்; ஹெட் - அபிஷேக் சர்மா அவுட்; கெத்து காட்டும் கொல்கத்தா!
KKR vs SRH LIVE Score: அதிர்ச்சியில் ஹைதராபாத்; ஹெட் - அபிஷேக் சர்மா அவுட்; கெத்து காட்டும் கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs SRH LIVE Score: அதிர்ச்சியில் ஹைதராபாத்; ஹெட் - அபிஷேக் சர்மா அவுட்; கெத்து காட்டும் கொல்கத்தா!
KKR vs SRH LIVE Score: அதிர்ச்சியில் ஹைதராபாத்; ஹெட் - அபிஷேக் சர்மா அவுட்; கெத்து காட்டும் கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஜேஷ் தாஸ்..! துண்டிக்கப்பட்ட மின்சாரம்,  மற்றொரு வழக்கில் சிக்கிய பரிதாபம்..!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஜேஷ் தாஸ்..! துண்டிக்கப்பட்ட மின்சாரம், மற்றொரு வழக்கில் சிக்கிய பரிதாபம்..!
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
Embed widget