மேலும் அறிய

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகிறது. அதோடு வெப்ப காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், வளிமண்டலம் மேல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாநகர பகுதியில் கனமழை:

இந்த நிலையில், இன்று காலை முதல் சேலம் மாநகர பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, ஜங்ஷன், அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாப்பேட்டை, நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது நண்பகல் ஒரு மணி அளவில் கனமழையாக செய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சேலம் மாநகரப் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

ஏற்காட்டில் மரம் சாய்ந்தது:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சேலம் ஏற்காடு பிரதான மலை பாதையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் ஏற்காடு பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி:

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஏற்காட்டில் கனமழை பெய்து வருவதால் கடும் பணி நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

ஆத்தூரில் கனமழை:

இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் எச்சரிக்கை:

சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget