மேலும் அறிய

"அரசு அலுவலகங்களில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்த விளம்பரங்களை எழுத வேண்டும்" - சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அரசு அலுவலகங்களில் உள்ள சுற்றுச்சூழலில் சினிமா விளம்பரங்கள் அரசியல் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு துறை சார்ந்த திட்டங்கள் விளம்பரமாக எழுதிட வேண்டும் .

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை, வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை எடுத்துரைத்தனர். அப்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அதிகரிக்க அரசு சார்பில் மரக்கன்றுகள் நடும்பனி தொடர்ந்து. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள சுற்றுச்சூழலில் சினிமா விளம்பரங்கள் அரசியல் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு துறை சார்ந்த திட்டங்கள் அரசின் இலக்குகள் ஆகியவற்றை சுவர் விளம்பரமாக எழுதிட வேண்டும். அப்பொழுதுதான் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும் என்று தெரிவித்தார். மேலும் அந்தந்த துறை அலுவலர்கள் அவர்களது அலுவலக சுவர்களில் உள்ள போஸ்டர்களை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கர்சேன் பயோ நேச்சுரல் என்கிற பெயரில் ரசாயன ஆலை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலை பயன்பாட்டிற்கு வந்தால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த ஆலையை அனுமதிக்கக் கூடாது என ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஆலை கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி 50 ஆவது வார்டு பகுதியில் தனியார் ஆயில் மில் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் எண்ணெய் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திருமணமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் விடுவதால் பாசனத்திற்கு நீரை பயன்படுத்தும் பொழுது விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு திருமணிமுத்தாறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிணறுகளில் நீர் மாசடைந்து ஆயில் கலந்த மாறி உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாமலும் கால்நடைகளுக்கு நீரின்றி விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறுதியளித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
Embed widget