![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிப்பு. 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச நீர்வரத்தால், 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
![தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Flood warning for 5 districts due to highest water flow after 20 years due to High water flow of Thenpennai river TNN தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/9363e65201b2a38b18d1c4867d5458631662621261712501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு மழையின்றி வறண்டு காணப்பட்டது.
கனமழையினால் நீர் திறப்பு:
தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் கர்நாடக மாநிலத்தில், பெய்து வரும் தொடர் கன மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து வினாடிக்கு சுமார் 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்து நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீரும், சனத்குமார் நதியில் 1000 கன அடி தண்ணீர் என, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிற்கு வினாடிக்கு 19,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர் மழையால், தென்பெண்ணை ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது, அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி, நுரை பொங்கி தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, சிங்கேரிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர், டி.அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஊத்தங்கரை பாம்பாறு அணையிலிருந்து சுமார் 3000 கன அடி திறக்கப்பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு சுமார் வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவே, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)