மேலும் அறிய

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

’’அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும்’’

தருமபுரி மாவட்டத்தில் 96 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் ஒரு மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளில், மது பாட்டில்களின் மீது, அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு மதுக் கடைகளில் அதிகபட்ச விலையை விட, கூடுதல் பணம் வசூல் செய்தால் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மதுபான கடைகளில் மாவட்ட மேலாளர்கள், முதுநிலை  மண்டல மேலாளர்கள் திடீர் திடீரென ஆய்வு செய்து வருகின்றனர்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்களூரில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில் மது வாங்க வருபவர்களிடம் அதிகபட்ச  விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அப்பொழுது மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், அதிகபட்ச விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்ததும், சிக்களூர் கடையில் போதிய விற்பனையாளர்கள் இருந்தும், அருகில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர் பாஸ்கர் என்பவரை அழைத்து வந்து மது விற்பனையில் கூடுதலாக பணம் வசூலித்தது தெரியவந்தது.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இதனைத் தொடர்ந்து அதிகபட்ச விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததும், போதிய விற்பனையாளர்கள் பணியிலிருந்தும் அருகில் உள்ள கடையில் பணியாற்றும்  விற்பனையாளரை வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த காரணத்திற்காக, கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், விற்பனையாளர் பாஸ்கர் இருவரையும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் உத்தரவிட்டார்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
மேலும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும். அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள மதுக்கூடங்களை திறந்து, மது அருந்த அனுமதிப்பதோ அல்லது தின்பண்டங்களை விற்பனை செய்யவோ கூடாது. மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மதுபான கடை ஊழியர்களை சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget