மேலும் அறிய

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

’’அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும்’’

தருமபுரி மாவட்டத்தில் 96 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் ஒரு மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளில், மது பாட்டில்களின் மீது, அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு மதுக் கடைகளில் அதிகபட்ச விலையை விட, கூடுதல் பணம் வசூல் செய்தால் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மதுபான கடைகளில் மாவட்ட மேலாளர்கள், முதுநிலை  மண்டல மேலாளர்கள் திடீர் திடீரென ஆய்வு செய்து வருகின்றனர்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்களூரில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில் மது வாங்க வருபவர்களிடம் அதிகபட்ச  விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அப்பொழுது மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், அதிகபட்ச விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்ததும், சிக்களூர் கடையில் போதிய விற்பனையாளர்கள் இருந்தும், அருகில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர் பாஸ்கர் என்பவரை அழைத்து வந்து மது விற்பனையில் கூடுதலாக பணம் வசூலித்தது தெரியவந்தது.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இதனைத் தொடர்ந்து அதிகபட்ச விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததும், போதிய விற்பனையாளர்கள் பணியிலிருந்தும் அருகில் உள்ள கடையில் பணியாற்றும்  விற்பனையாளரை வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த காரணத்திற்காக, கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், விற்பனையாளர் பாஸ்கர் இருவரையும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் உத்தரவிட்டார்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
மேலும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும். அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள மதுக்கூடங்களை திறந்து, மது அருந்த அனுமதிப்பதோ அல்லது தின்பண்டங்களை விற்பனை செய்யவோ கூடாது. மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மதுபான கடை ஊழியர்களை சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget