மேலும் அறிய

கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!

தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதம் நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிலோ  20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!
 
கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு  விற்பனையானது. மேலும்  விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3, 4 என, அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர். இதனால் அறுவடை செய்யும் கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிகமாக இருந்தாலும் வெளியூருக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் முள்ளங்கி விலை கடந் மூன்று மாதங்களுக்கு பிறகு, கிலோ ரூ.20 என ஏற்றம் கண்டுள்ளது. மேலும் வெளி மார்க்கெட்டில் ரூ.30 வரை விற்பனையாகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு பின் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

 
தருமபுரி அருகே கிராமத்தில் இருந்த பொது கிணற்றை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
 

கிலோ  20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!
 
 
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஹள்ளி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் பொது கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த பொது கிணறு பயன்பாட்டில் இல்லாததால், பொது கிணறு அருகில் உள்ள கலையரசி என்பவர் பொது கிணறை இடித்து தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் சிமெண்ட் தரை தளம் அமைத்து தனது வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கிராமத்தில் உள்ள பொது கிணற்றை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த மே மாதம் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மிட்டாநூலஹள்ளி கிராமத்திற்கு வந்து, ஆக்கிரமிப்பு செய்த பொது கிணறு அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்து, நான்கு புறமும் எல்லை கற்களை நட்டு வைத்துள்ளனர்.
 
 
ஆனால் அப்பொழுது அதிகாரிகளை அளவீடு செய்யாமல், பொதுமக்களையும், அதிகாரிகளையும் கலையரசி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். இந்நிலையில் அதிகாரிகள் அளவீடு செய்து விட்டு போன பிறகு மீண்டும் அந்த எல்லைக் கற்களை புடுங்கி வீசிவிட்டு, அந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் அளவீடு செய்து நான்கு மாத காலமாகியும், ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் அதிகாரிகளையும், பொதுமக்களையும் தரக்குறைவாக பேசி, அரசுக்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்த எல்லை கற்களை பிடுங்கி எரிந்து விட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Breaking News LIVE, 20 Sep : தமிழக மக்களே உஷார் - வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை
Breaking News LIVE, 20 Sep : தமிழக மக்களே உஷார் - வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Breaking News LIVE, 20 Sep : தமிழக மக்களே உஷார் - வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை
Breaking News LIVE, 20 Sep : தமிழக மக்களே உஷார் - வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Embed widget