மேலும் அறிய

கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!

தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதம் நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிலோ  20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!
 
கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு  விற்பனையானது. மேலும்  விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3, 4 என, அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர். இதனால் அறுவடை செய்யும் கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிகமாக இருந்தாலும் வெளியூருக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் முள்ளங்கி விலை கடந் மூன்று மாதங்களுக்கு பிறகு, கிலோ ரூ.20 என ஏற்றம் கண்டுள்ளது. மேலும் வெளி மார்க்கெட்டில் ரூ.30 வரை விற்பனையாகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு பின் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

 
தருமபுரி அருகே கிராமத்தில் இருந்த பொது கிணற்றை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
 

கிலோ  20 ரூபாய்க்கு விற்பனையாகும் முள்ளங்கி....மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..!
 
 
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஹள்ளி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் பொது கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த பொது கிணறு பயன்பாட்டில் இல்லாததால், பொது கிணறு அருகில் உள்ள கலையரசி என்பவர் பொது கிணறை இடித்து தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் சிமெண்ட் தரை தளம் அமைத்து தனது வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கிராமத்தில் உள்ள பொது கிணற்றை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த மே மாதம் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மிட்டாநூலஹள்ளி கிராமத்திற்கு வந்து, ஆக்கிரமிப்பு செய்த பொது கிணறு அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்து, நான்கு புறமும் எல்லை கற்களை நட்டு வைத்துள்ளனர்.
 
 
ஆனால் அப்பொழுது அதிகாரிகளை அளவீடு செய்யாமல், பொதுமக்களையும், அதிகாரிகளையும் கலையரசி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். இந்நிலையில் அதிகாரிகள் அளவீடு செய்து விட்டு போன பிறகு மீண்டும் அந்த எல்லைக் கற்களை புடுங்கி வீசிவிட்டு, அந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் அளவீடு செய்து நான்கு மாத காலமாகியும், ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் அதிகாரிகளையும், பொதுமக்களையும் தரக்குறைவாக பேசி, அரசுக்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்த எல்லை கற்களை பிடுங்கி எரிந்து விட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Chennai Power Shutdown:  சனிக்கிழமை கூடவா? சென்னையில்  50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Chennai Power Shutdown: சனிக்கிழமை கூடவா? சென்னையில் 50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
Embed widget