மேலும் அறிய

தருமபுரி: மழையை பொருட்படுத்தாமல், சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ

தருமபுரி அருகே மழையை பொருட்படுத்தாமல், வெள்ளக்கல் முதல் ஈசல்பட்டி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த தருமபுரி எம்பி, எம்எல்ஏ.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈசல்பட்டி வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் நீள சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அதிக அளவில் சரக்கு வாகனங்களும் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் விவசாய பொருட்கள் சந்தை படுத்துவதற்காக காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதால் குறுகிய சாலையாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
 
அதனை அடுத்து  பிரதம மந்திரி கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையை சுமார் 8 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை அகலப்படுத்தும் பணியை துவக்கி வைப்பதற்காக வந்த பொழுது கனமழை பெய்தது. அப்பொழுது மழையையும் பொருட்படுத்தாமல் எம்பி செந்தில்குமார் மற்றும் எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். மேலும் கொட்டும் மழையிலும் சாலை பணியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

 
தருமபுரி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரவு, பகல்  இடைவிடாமல், மிதமான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்திருந்தார். தொடர்ந்து இன்று இரண்டாவது தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பொழிந்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடுங்குளிரால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்,  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று என்பதால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Tata Sierra EV: டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Embed widget