மேலும் அறிய

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது.

காரிமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாதத்திற்கு மேலாக சுற்றி திரியும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயகள் அச்சமடைந்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் காட்டிலிருந்து இரண்டு ஆண் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இன்று காரிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் பெரிய மொரசப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி(70) என்பவர் இயற்கை உபாதை கழிக்க விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த காட்டு யானைகள் முதியவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து வேடி சம்பவ இடத்திலேயே பரிதாமபாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நீண்ட நேரம் ஆன பிறகு முதியவர் இறந்து தெரியவந்தது. தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
 
தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது. உணவுக்காக விவசாய நிலங்களில் நுழைவதும்,  விவசாய பயிர்களை அழித்தும் வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு இரண்டு யானைகளால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத் துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து, முறையாக கணக்கெடுத்து சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனப் பகுதிகளுக்கு செல்லாமல், கிராமப் புறங்களில் சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த இரண்டு காட்டு யானைகள், போச்சம்பள்ளியில் ஒரு இளைஞரையும், மாரண்டஹள்ளி அருகே  ஒரு முதியவரையும் தாக்கியதில் உயிரிழந்து உள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இன்று காரிமங்கலம் பகுதியில் முதியவரை காட்டி இரண்டு யானைகளும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பஞ்சப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த பெண்ணை யானைகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால்  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிகளுக்குள் விரட்டி ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget