மேலும் அறிய

Dharmapuri: கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் கடன் வழங்க வேண்டும் - வங்கி ஊழியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடன் வழங்க வேண்டும் - தருமபுரி மாவட்ட ஆட்சியர்

கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடன் வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர்  சாந்தி வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தில் உள்ள மக்களை வாழ்வாதாரத்தை உயர்த்தி தொழில் முனைவராக உருவாக்குவதற்கு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்ட கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் குறித்து வங்கி மற்றும் தாட்கோ மேலாளர்கள் எடுத்துரைத்தனர். அப்பொழுது எல்லா திட்டங்களிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்க, துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் வங்கிகளுக்கு சென்றால், ஆவணங்கள் சரியில்லை, ஜாமீன் தாரர்கள் வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து வருகின்றனர். மேலும் பண பரிவர்த்தனை, வங்கியில் கேட்கப்படுகின்ற விவரங்கள் அனைத்தும் கொடுத்தால் கூட, உங்களது ஊரில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, கடனே வழங்காமல் திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

Dharmapuri: கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் கடன் வழங்க வேண்டும் - வங்கி ஊழியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
 
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, எஸ்சி எஸ்டி மக்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிதிகள் ஒதுக்கி வருகிறது. இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் பெரிய தொழில் செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதிதாக தொழில் முனைய தொடங்க வருபவர்கள், பெரிய அளவில் கடன் உதவி பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட வேண்டாம்.  அதேபோல் வங்கியில் பெரிய அளவிலான தொழில்களை மேற்கொள்வதற்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை கேட்பதால், தொழில் தொடங்க இயலாது. இதில் சுமார் பத்து லட்சத்துக்கு கீழ் இருந்தால், வங்கிகளில் ஜாமீன் தாரர்கள் கேட்காமல் வழங்க முடியும்.  எனவே தொழில் முனையை வருபவர்கள் இதனை பயன்படுத்தி கடன் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  ஒரு சில இடங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் அறியாமையை பயன்படுத்தி, வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த திட்டங்களில் பயன்பெற முயற்சிக்கின்றனர். இதற்கு இடம் கொடுக்காமல் தங்களுக்கு கிடைக்கின்ற இந்த திட்டத்தினை பயன்படுத்தி அனைவரும் தொழில் முனைவோராக வரவேண்டும்.

Dharmapuri: கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் கடன் வழங்க வேண்டும் - வங்கி ஊழியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
 
மேலும், கடனுதவி பெறுபவர்களிடம் உரிய விவரங்களை பெற்றுக் கொண்டு அழைக்கழிக்காமல், விண்ணப்பதாரரை நிராகரிக்காமல், அதற்கான தேவைகளை விவரங்களை கேட்டு கடன் உதவிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே தொழில் முனைவோரை அதிகமாக உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தாட்கோ மேலாளர் சிட்டிபாபு, தொழில் மைய அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
 
 
 

 
 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget