மேலும் அறிய

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்

அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவும், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தது. இந்த பகுதில் வெளியேறும்  மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின்  ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். தற்போது வடகிழக்கு பருவமழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. மேலும் வள்ளிமதுரை, வாணியாறு அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு அரூர் வாணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
 

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்
 
இதேபோல் மறுபுறம் வாணியாறு அணையில் இருந்து வரும் உபரி நீரால், அரூர் பெரிய ஏரி நிரம்பி வருகிறது. மேலும் அரூர் மேட்டுத்தெரு, கோவிந்தசாமி நகர், பாரதியார் நகர் கொளகம்பட்டி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ராஜ கால்வாயை ஆக்கிரமிப்பால் வெளியேற வழியில்லாமல் அரூர்  பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், குபேந்திரன் நகர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், அதன் பின்புறம் மற்றும் வயல்வெளிகளிலும் தேங்கி நிற்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக அரூர் பகுதியில் ஒரு புறம் வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு மறுபுறம் பெரிய ஏரியில் முழுவதும் தண்ணீர் நிரம்பியும் மற்றொரு புறம் வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மூன்று பக்கங்களும் தண்ணீரால் சூழ்ந்து தீபகற்பம் போல் காட்சி அளித்து வருகிறது. 
 

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்
 
இதனால் பொதுமக்கள் மழை நீரில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை, சட்டமன்ற உறுப்பினர் வர.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் வே.முத்தையன் உள்ளிட்டோர் நேரடியாக வந்து ஆய்வு செய்து தற்காலிகமாக அகற்றியுள்ளனர். ஆனால்  அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள், தண்ணீர் கால்வாய்களின் வழியாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரூர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 60,000 கன அடியில் இருந்து 40,000 கன அடியாக குறைந்தது

 

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget