மேலும் அறிய

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்

அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவும், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தது. இந்த பகுதில் வெளியேறும்  மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின்  ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். தற்போது வடகிழக்கு பருவமழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. மேலும் வள்ளிமதுரை, வாணியாறு அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு அரூர் வாணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
 

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்
 
இதேபோல் மறுபுறம் வாணியாறு அணையில் இருந்து வரும் உபரி நீரால், அரூர் பெரிய ஏரி நிரம்பி வருகிறது. மேலும் அரூர் மேட்டுத்தெரு, கோவிந்தசாமி நகர், பாரதியார் நகர் கொளகம்பட்டி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ராஜ கால்வாயை ஆக்கிரமிப்பால் வெளியேற வழியில்லாமல் அரூர்  பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், குபேந்திரன் நகர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், அதன் பின்புறம் மற்றும் வயல்வெளிகளிலும் தேங்கி நிற்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக அரூர் பகுதியில் ஒரு புறம் வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு மறுபுறம் பெரிய ஏரியில் முழுவதும் தண்ணீர் நிரம்பியும் மற்றொரு புறம் வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மூன்று பக்கங்களும் தண்ணீரால் சூழ்ந்து தீபகற்பம் போல் காட்சி அளித்து வருகிறது. 
 

தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்
 
இதனால் பொதுமக்கள் மழை நீரில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை, சட்டமன்ற உறுப்பினர் வர.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் வே.முத்தையன் உள்ளிட்டோர் நேரடியாக வந்து ஆய்வு செய்து தற்காலிகமாக அகற்றியுள்ளனர். ஆனால்  அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள், தண்ணீர் கால்வாய்களின் வழியாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரூர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 60,000 கன அடியில் இருந்து 40,000 கன அடியாக குறைந்தது

 

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget