மேலும் அறிய

‘இளைய சமூகமே எழுங்கள் நாளைய பாரதம் நமது கையில்’ - அசத்திய அரசு பள்ளி மாணவி

அரூரில் நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில், இளைய சமூகமே எழுங்கள் நாளைய பாரதம் நமது கையில் என பேசி அசத்திய நான்காம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.

இன்று நாடு முழுவதும் இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த குடியரசு தினவிழாவில் நான்காம் வகுப்பு படிக்கும் ஹனிஸ் பிரித்தனா குடியரசு தின விழா குறித்து பேசினார்.
 
மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பேசிய சிறுமி அனைவரையும் கவரும் வகையில், இயற்கை அழகாலும், காலநிலையாலும்,  செல்வ செழிப்பாலும் சிறப்பு பெற்றது நமது பாரதம். அயல் நாட்டவரின் படையெடுப்பாலும், மேலைநாட்டவரின் வழிகெடுத்ததாலும் பாதிப்புக்குள்ளான பாரதம், பொருள் விற்க வந்த கூட்டம் நம்மை பதம் பார்த்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெள்ளையர் கூட்டம் பிரித்தாலும் கொள்கையை கவ்வி பிடித்தது. வேலூர் சிப்பாய் கலகம், ஒத்துழமையா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேற இயக்கம் உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் ஆட்டம் கண்ட எலிகளை ஓட்டம் பிடிக்க வைத்தது. இதன் விளைவாக 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. 
 
இதனால் நமக்கான அரசியலமைப்பை டாக்டர். அம்பேத்கர் ஏற்படுத்தினார். இவரைப் பற்றி பேச இன்றளவும் போதாது. எனவே, 1950 ஜனவரி 26 -ம் நாள் நடைமுறை ப்படுத்தியதால் அந்த நாளை குடியரசு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இளைய சமூகமே எழுங்கள் நாளைய பாரதம் நமது கையில். வந்தே மாதரம் என்று முழக்கமிட்டார். இந்தப் பேச்சை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் சிறுமி நாட்டைப் பற்றி இளைஞர்களுக்கு எளிமையாக ஆற்றிய உரையை பாராட்டினர்.

குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
 
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதகபாடி ஊராட்சியில் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் இன்று  நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி உறுதி அளித்தார்.

‘இளைய சமூகமே எழுங்கள் நாளைய பாரதம் நமது கையில்’ - அசத்திய அரசு பள்ளி மாணவி
 
இக்கிராம சபைக்கூட்டத்தில், அதகபாடி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், சுகாதாரம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), குடிநீர் வசதி, சாலைவசதி, கழிவுநீர் வாய்கால் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று தொழுநோய் உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அலுவலர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
Embed widget