மேலும் அறிய

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு

’’உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது’’

தருமபுரி மாவட்டம் அரூர் 4 ரோட்டில் பாலமுருகன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு சிலர், இரவு நேரங்களில் உணவகத்திலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் உணவகத்தில் பயணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து புதிதாக பணிக்கு சேர்ந்த ரிஸ்வான் என்பவரும் இரவு நேரத்தில் உணவகத்திலே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மூன்றாம் தேதி இரவு வழக்கம்போல உணவகத்தில் பணி எல்லாம் முடித்துவிட்டு, காலையில் ஊழியர்கள், மளிகை கடைக்கு கொடுப்பதற்கான பணம், சீட்டு பணம்  80,000 உள்ளிட்ட 1.82 லட்சம் பணத்தை பாலமுருகன் கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார். தொடர்ந்து காலையில் எல்லோருக்கும் கொடுத்து விட்டு வெளியூர் செல்வதாக திட்டமிட்டு இருந்துள்ளார். 
 

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு
 
இந்நிலையில் புதன் கிழமை இரவு உணவகத்தின் பணியாற்றிய ரிஸ்வான் மற்றும் அஜித் இருவரும் இரவு ஒரு மணிவரை மது அருந்திவிட்டு உறங்கியுள்ளனர். தொடர்ந்து வழக்கம்போல் தீபாவளி அன்று காலை பாலமுருகனின் தாய் முருகேஸ்வரி உணவகத்தை திறந்துள்ளார். அப்பொழுது உணவகத்தில் இருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மகன் பாலமுருகன் இடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அப்பொழுது வந்து பார்த்த பொழுது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.82 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 
 

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு
 
 
மேலும் கடையில் பணியாற்றிய அஜித், ரிஸ்வான் இருவரில் ரிஸ்வான் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அதிகாலை 4 மணிக்கு ரிஸ்வான் கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து கல்லாப் பெட்டியை திறந்து உடைத்து பணம் எடுத்த ரிஸ்வான் மீது பாலமுருகன் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்பொழுது உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் பணியாற்றியவரே கடையில் கல்லா பெட்டியை உடைத்து ரூ.1.82 இலட்சம் பணம் திருடி சென்ற சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget