மேலும் அறிய

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு

’’உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது’’

தருமபுரி மாவட்டம் அரூர் 4 ரோட்டில் பாலமுருகன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு சிலர், இரவு நேரங்களில் உணவகத்திலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் உணவகத்தில் பயணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து புதிதாக பணிக்கு சேர்ந்த ரிஸ்வான் என்பவரும் இரவு நேரத்தில் உணவகத்திலே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மூன்றாம் தேதி இரவு வழக்கம்போல உணவகத்தில் பணி எல்லாம் முடித்துவிட்டு, காலையில் ஊழியர்கள், மளிகை கடைக்கு கொடுப்பதற்கான பணம், சீட்டு பணம்  80,000 உள்ளிட்ட 1.82 லட்சம் பணத்தை பாலமுருகன் கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார். தொடர்ந்து காலையில் எல்லோருக்கும் கொடுத்து விட்டு வெளியூர் செல்வதாக திட்டமிட்டு இருந்துள்ளார். 
 

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு
 
இந்நிலையில் புதன் கிழமை இரவு உணவகத்தின் பணியாற்றிய ரிஸ்வான் மற்றும் அஜித் இருவரும் இரவு ஒரு மணிவரை மது அருந்திவிட்டு உறங்கியுள்ளனர். தொடர்ந்து வழக்கம்போல் தீபாவளி அன்று காலை பாலமுருகனின் தாய் முருகேஸ்வரி உணவகத்தை திறந்துள்ளார். அப்பொழுது உணவகத்தில் இருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மகன் பாலமுருகன் இடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அப்பொழுது வந்து பார்த்த பொழுது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.82 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 
 

தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு
 
 
மேலும் கடையில் பணியாற்றிய அஜித், ரிஸ்வான் இருவரில் ரிஸ்வான் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அதிகாலை 4 மணிக்கு ரிஸ்வான் கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து கல்லாப் பெட்டியை திறந்து உடைத்து பணம் எடுத்த ரிஸ்வான் மீது பாலமுருகன் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்பொழுது உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் பணியாற்றியவரே கடையில் கல்லா பெட்டியை உடைத்து ரூ.1.82 இலட்சம் பணம் திருடி சென்ற சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget