மேலும் அறிய

தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து  வினாடிக்கு 1,22,000 கனஅடி நீர்திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்த  வினாடிக்கு 1,22,000 கன அடி நீர்திறப்பு-காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர்வரத்தால், தொடரும் வெள்ளப் பெருக்கு.

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,22,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,50,000 கனஅடி நீர்வரத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடியும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 97,000 கன அடி என தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளது. இதனால் வினாடிக்கு 2 இலட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து வந்தது. தொடர்ந்து வினாடிக்கு 1,75,000 கன அடியாக குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் குறைந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,75,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 1,50,000 கன அடியாக குறைந்தது. 


தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து  வினாடிக்கு 1,22,000 கனஅடி நீர்திறப்பு

 

இந்நிலையில் மேலும் மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தமிழகத்திற்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வினாடிக்கு 1,50,000 கன அடியாக தொடர்கிறது. தொடர்ந்து 7-வது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகள் என எதுவும் தெரியாத அளவிற்கு வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் 30 நாளாக சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.


தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து  வினாடிக்கு 1,22,000 கனஅடி நீர்திறப்பு

தொடர்ந்து நீர்வரத்து சற்று குறைந்ததால், ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி பகுதிகளில், குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் சற்று குறைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தேங்கிய தண்ணீரும் சற்று குறைந்துள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் கன மழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த 20 நாட்களில் 80 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு 100 டிஎம்சி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget