மேலும் அறிய

தருமபுரியில் இடியும் நிலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரம்

திருநெல்வேலியில் பள்ளி கழிப்பறை இடிந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு

அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.  இதனை அடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.‌ இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.  இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார்.
 

தருமபுரியில் இடியும் நிலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரம்
 
இதனால் தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட  பழுதடைந்த 70 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள பழுது நிவர்த்தி செய்ய முடியாத அளவில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தருமபுரியில் இடியும் நிலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரம்
 
ஞாயிற்று கிழமையான நேற்று ஒரே நாளில் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து, முதலில் ஆபத்தான முறையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்த 106 வகுப்பறைகள், 55 சமையலறைகள், 97 தண்ணீர் தொட்டிகள், 29 வளாகச் சுவர்கள், 247 கழிப்பறை அலகுகள், 5 ஆய்வகம்,1 அங்கன்வாடி மையம் மற்றும் 6 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரளவுக்கு பழுதான கட்டிடங்களை வருகிற ஞாயிற்று கிழமை இடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 

தருமபுரியில் இடியும் நிலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரம்
 
மேலும் மாவட்டத்தில் உள்ள பழைய, பழுதான மாணவர்கள் அமர தகுதியில்லாத கட்டிடங்கள், பயன்படுத்த முடியாத கழிவறை கட்டிடங்கள், சமையல் கூடங்கள், தண்ணீர் தொட்டிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க தேவையான வகுப்பறைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget