மேலும் அறிய

"மாடி வீடு கட்டினால் மரணம், அச்சுறுத்தும் நம்பிக்கை.." : அச்சத்தில் வாழும் கிராமம் எப்போது மீளும்?

பெரியசாமி உள்ள கோவிலில் மேல்கூரை இல்லாததால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் ஓட்டு வீடாக உள்ளது என்றனர்.

நவீன நாகரீக வாழ்க்கையில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவது, நிலாவில் தங்கள் பெயரில் இடங்களை வாங்கி வரும் நிலையில். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 ராக்கெட் கொண்டு சென்ற செயற்கைக்கோளின் இருந்த ரோவர் என்ற நிலாவில் செல்லும் வாகனத்தின் பரிசோதனைக்காக நிலாவில் உள்ள மண்ணிற்கு நிகரான மண், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட சேலம் மாவட்டத்தில் மாடி வீடு கட்டினால் கடவுள் தண்டித்து விடும் என்ற அச்சத்தில் ஒரு கிராமமே நூறு ஆண்டிற்கு மேலாக ஓட்டு வீடுகளில் வாழ்ந்து வருகிறது.

உருக்கு ஆலை, விமான நிலையம், இரண்டு அடுக்கு மேம்பாலங்கள், பல்நோக்கு மருத்துவமனை, விரைவில் ராணுவ தளவாட மையம் என சேலம் மாவட்டம் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சி மிக்க சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள கருத்த ராஜபாளையம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் மாடி வீடு கட்டியது இல்லை.

அனைவரும் குடிசை வீடு, ஓட்டு வீடுகளிலும், தரைத்தளம் மட்டுமே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் காரணமாகக் கூறுவது, அக்கிராமத்தின் எல்லையுள்ள பெரியசாமி என அனைவரும் நம்பப்படும் கடவுள். பெரியசாமி கோவில் தரையிலுள்ளதால் யாரும் உயரத்திலிருந்து கடவுளை பார்க்க கூடாது என கிராம மக்களின் முன்னோர்கள் பின்பற்றியது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கருத்த ராஜபாளையத்தில் மாடி வீடு கட்டினால் பெரியசாமி வீட்டின் உரிமையாளரை கொன்று விடுவார் என்று நம்பப்படுகிறது. பெரியசாமி கோவில் பார்ப்பதற்கு காவல் குதிரைகள் சிற்பம், பெரிதாக இரண்டு கண்கள், கையில் அருவாள் வைத்துக்கொண்டு பார்ப்பதற்கும் மிக பயங்கரமாக காட்சியளிக்கிறார் பெரியசாமி.

இதுகுறித்து கருத்த ராஜபாளையம் கிராம மக்களிடம் கேட்டபோது, ”பெரியசாமி மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் எங்களிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி கூறிவிடுவார். இந்த கிராமத்து யாரேனும் தவறு செய்தால் பெரியசாமி கோவிலுக்கு சென்று வேலை தலைகீழாக நட்டு வைத்தால் அவர்களை பெரியசாமி மன்னித்து விடுவார். பெரியசாமி உள்ள கோவிலில் மேல்கூரை இல்லாததால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் ஓட்டு வீடாக உள்ளது என்றனர். இதுமட்டுமின்றி அவர்கள் இன்னும் சில அதிர்ச்சி தகவல்களை கொடுத்தனர். மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளை கருத்த ராஜபாளையம் கிராமத்தில் தொட்டிலில் படுக்க வைக்க மாட்டோம். பெரியசாமி கோவிலை கடக்கும் போது காலணிகளை அணிய மாட்டோம். காலணிகளை கைகளில் எடுத்துச் சென்று கோவில் எல்லை முடிந்தபிறகு துணிந்து செல்வோம், இதனை யாரேனும் மீறினால் அவர்கள் பெரியசாமி கோபத்திற்கு ஆளாகி அவர்கள் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் என்று கருத்த ராஜபாளையம் கிராம மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

உலகம் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், கருத்த ராஜபாளையம் போன்ற பல கிராமங்கள் இன்றளவும் தேவையற்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். மீள்வார்களா மக்கள்?

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget