மேலும் அறிய

கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

’’மருபங்கியா ஓடை குறுக்கே சாலை மற்றும் பாலம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை’’

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் தொடர்ந்து ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது இதன்  காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் கடந்த 19 ஆம் தேதி தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மீண்டும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் விவசாய நிலங்கலிளும் மழை நீர் சூழ்ந்தது இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர், மேலும் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படட்டது.

கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

இந்நிலையில் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்து உள்ள கொரக்கவாடி கிராமத்தில் மருபங்கியா ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு எதிரே 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக, ஓடை  அருகே உள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மேலும், அங்கு பாலம் வசதி இல்லாததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றால், மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலைக்கு ஆளானார்கள். இதனால் மக்கள் அவசர தேவைக்கு கூட அந்த வழியாக வர முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி, நேற்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கைக்குழந்தைகளுடன் ஓடைக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே மேடான பகுதியில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.


கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

இதுபற்றி அறிந்த ராமநத்தம் காவல் துறையினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தை விலக்கி கொள்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதன்பேரில், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முக சிகாமணி ஆகியோர் நேரில் வந்து பேச்சவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சாலையை சீரமைத்து, ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது, மேலும் இதற்கு தற்காலிகமாக சரி செய்து விட்டு விடாமல் மீண்டும் இது போன்று நிகழாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget