மேலும் அறிய

செல்போன் டவரில் ஏறி மேஸ்திரி தற்கொலை மிரட்டல் - லஞ்சம் தந்தும் பட்டா மாற்றி தர மறுப்பதாக புகார்

’’தாசில்தாருக்கு ரூபாய் 25 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் அவர் தனக்கு 14 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தரவில்லை என புகார்’’

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஏலகிரியான்  கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி விவசாயி. இவருக்கும் 6 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரியசாமிக்கு சொந்தமாக ஏலகிரியான்கொட்டாயில்  விவசாய நிலம் உள்ளது. இது அனைவருடைய பெயரிலும் கூட்டுபட்டா வாக உள்ளது. இதில் விஸ்வநாதன் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும் திருப்பதி (11), என்ற மகனும் அப்ஷரா (9) என்ற மகளும் உள்ளனர்.
 

செல்போன் டவரில் ஏறி மேஸ்திரி தற்கொலை மிரட்டல் - லஞ்சம் தந்தும் பட்டா மாற்றி தர மறுப்பதாக புகார்
 
இந்த நிலத்தில் விஸ்வநாதனுக்கு 70 சென்ட் நிலத்தை பிரித்து கொடுத்து உள்ளனர். இதற்கு பட்டா வழங்க கேட்டு பல மாதங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு  அலைந்துள்ளார். தனி பட்டா கேட்டு பல மாதங்களாக அலைந்து வந்ததாகவும், இதற்காக தாசில்தாருக்கு ரூபாய் 25 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் அவர் தனக்கு 14 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தரவில்லை.  மேலும் தற்போது இருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கு 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பட்டா மாறுதல் செய்து தரவில்லை. இதனை வருவாய் துறையினரிடம் விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்பொழுது மற்ற சகோதரர்கள் கையெழுத்து போடாத காரணத்தினால், பட்டா வழங்க இயலாது என வருவாய் துறையினர் கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த விஸ்வநாதன் இன்று காலை 8 மணியளவில் அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் அருகில் உள்ள 100 அடி  செல்போன் டவரில், கயிறுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனக்கு தனி பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
 

செல்போன் டவரில் ஏறி மேஸ்திரி தற்கொலை மிரட்டல் - லஞ்சம் தந்தும் பட்டா மாற்றி தர மறுப்பதாக புகார்
 
இதனையடுத்து தருமபுரி டி.எஸ்.பி அண்ணாதுரை, அதியமான் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தாசில்தார் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் வருவாய் துறையினர், செல்போன் டவர் மேல் இருந்த விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் எனக்கு உடனடியாக பட்டா வழங்கினால் மட்டுமே கீழே இறங்குவேன். தனது மனைவி ரஞ்சிதம் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் டவர் மீது ஏறும் பொழுது யாராவது மேலே ஏறினால் நான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
 
இதனையடுத்து தருமபுரி டி.எஸ்.பி. அண்ணாதுரை, விஸ்வநாதனிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து விஸ்வநாதன் கீழே இறங்கினார். தொடர்ந்து விஸ்வநாதன் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுத அழுதனர். தொடர்ந்து செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விஸ்வநாதனை அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 5 மணி நேரமாக விவசாயி விஸ்வநாதன் டவர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget