மேலும் அறிய

PM Modi US Visit: மோடியை எதிர்க்கும் எம்.பி.க்கள்.. கொண்டாடும் அரசியல்வாதிகள்..! அமெரிக்காவில் நடப்பது என்ன?

அமெரிக்காவின் அரசாங்க அமைப்புகள் பிரதமர் மோடிக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிடும் நிலையில், அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அவரை கொண்டாடுவது ஏன் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

அமெரிக்காவின் அரசாங்க அமைப்புகள் பிரதமர் மோடிக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிடும் நிலையில், அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அவரை கொண்டாடுவது ஏன் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

”3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்க சென்ற நிலையில் அங்குள்ள அரசியல்வாதிகள், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் என பெருமை பேசினர். உலகையே இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினர் பெரும்பாலானோர் அவரது வருகைக்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், பிரதமர் மோடிக்கு அங்குள்ள பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும்போது போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்”

அமெரிக்காவில் மோடி:

இந்திய பிரதமராக  மோடி பொறுப்பேற்ற பின்பு பலமுறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், முதன்முறையாக அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று, 3 நாள் சுற்றுப்பயணமாக அண்மையில் அமெரிக்கா சென்றார். அதன் முக்கிய அம்சமாக, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

மோடியின் உரைக்கு குவிந்த பாராட்டுகள்:

அவையில் மோடி நுழைந்ததுமே அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ”மோடி மோடி” என முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்பாக மோடி பேசியபோது, இந்தியா என்பதை 37 முறையும், அமெரிக்கா என்பதை 18 முறையும், ஜனநாயகம் என்பதை 14 முறையும் குறிப்பிட்டார். அந்த உரையின்போது 15 முறை எம்.பிக்கள் எழுந்து நின்று மோடியின் உரையை கைத்தட்டி பாராட்டினர்.   

பைடனுக்கு எழுதப்பட்ட கடிதம்:

நாடாளுமன்றத்தில் இப்படியாக மோடி கொண்டாடப்பட, ஆளும் கட்சியை சேர்ந்த 75 எம்.பிக்கள் அதிபர் பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில், பல்வேறு ஆய்வறிக்கைகளை மேற்கோள்காட்டி ”இந்தியாவில் நிலவும் சுதந்திரமான அரசியலுக்கான வாய்ப்புகள் நசுக்கப்படுவது, மதசகிப்புத்தன்மை குறைந்து வருவது, மனித உரிமைகள் பறிக்கப்படுவது,  மக்களுக்கான அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், இணைய அணுகல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவை தொடர்பாக, மோடியிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க வேண்டும்” என அதிபர் பைடனுக்கு வலியுறுத்தி இருந்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜெயபால் எனும் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தார்.

”இந்துத்துவாவை ஊக்குவிக்கும் மோடி”

மோடியின் உரையை அதிபர் பைடன் கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்கள் புறக்கணித்தனர். அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ”பிரதமர் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்ததே பத்திரிகையாளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்கள் நசுக்கப்பட்டதற்கு சமம். நாட்டின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், மோடியை பேச அனுமதித்துள்ளீர்கள். அரசியல் லாபத்திற்காக இந்த பெரிய தியாகத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை.  மோடி அரசு, வன்முறையை கையாளும் இந்து தேசியவாத குழுக்களை ஊக்கப்படுத்துவதோடு, அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பதாகவும்” சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

வெள்ளை மாளிகை வளாகத்தில் போராட்டம்:

வெள்ளை மாளிகை வளாகத்திலும் பிரதமர் மோடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ”no to modi, not welcome modi” என்பது போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மையினரை மோடி வஞ்சிப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அவசியம்:

பிரதமரின் அமெரிக்க வருகை தொடர்பாக பேசியிருந்த முன்னாள் அதிபர் ஒபாமாவும் “நான் பிரதமர் மோடியுடன் உரையாடி இருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது  என வலியுறுத்துவேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

எதிரான ஆய்வறிக்கைகள்:

இதனிடையே, அமெரிக்க அரசு அமைப்புகள் வெளியிடும் பல்வேறு ஆய்வறிக்கைகளும் மோடி அரசுக்கு எதிராக தான் அமைந்துள்ளன. குறிப்பாக மதபிரச்னைகள் இந்தியாவில் அதிகரித்துளது, வெறுப்பு அரசியல், எதிர்க்கட்சியினர் மீதான கைது நடவடிக்கை, மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவது, சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர் என்பது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க அரசு அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் முன்வைக்கின்றன.

அரசியல்வாதிகள் பாராட்டுவது ஏன்?

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அமெரிக்க அரசியல்வாதிகள் அவரை பாராட்ட ஒரே காரணம் இந்தியா கொண்டுள்ள பிரமாண்ட வணிக சந்தை தான் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். 140 கோடி மக்கள் தொகையுடன் உலகின் மாபெரும் சந்தையாக விளங்குகிறது இந்தியா. அப்படி இருக்கையில் அந்த வணிக வாய்ப்பை உலகின் பெருநிறுவனங்களை கொண்ட அமெரிக்கா எப்படி தவற விடும்.

ஆயுத வியாபாரம்:

அதோடு, அமெரிக்காவின் பெரும் வணிகம் என்பதே அதிநவீன ஆயுதங்களின் விற்பனை தான். எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா உடன் பதற்றமான உறவையே வைத்துள்ள இந்தியாவிற்கு, அதிகப்படியான ராணுவ தளவாடங்கள் என்பது அவசியம். அந்த வியாபாரத்தை கைப்பற்றுவதும் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உக்ரைன் உடனான போரால் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இந்தியாவின் ஆயுத வியாபாரத்தை தனதாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது.

”தீராத ஆசை”

இறுதியாக உலகின் அண்ணாச்சியாக திகழ வேண்டும் என்பது அமெரிக்காவின் தனியாத விருப்பம். ஆனால், அதற்கு பெரும் சவாலாக இருப்பது ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனாவின் அபார எழுச்சி தான். அந்த சீனாவை ஒடுக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு என்பது அத்தியாவசியமானது. அதனால் தான், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை போல, அமெரிக்காவில் எந்த கட்சி ஆண்டாலும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget