மேலும் அறிய

'தமிழ்நாடு' சர்ச்சை விவகாரம்; இது சூழ்ச்சி.. தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் வேலை - திருமாவளவன் பேட்டி

ஆந்திரப் பிரதேஷ் என்கிறார்கள். பிரதேஷ் என்பதற்கும் வட மொழியில் நாடு என்பது தான் பொருள். ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் என வட மொழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். 

”தமிழ்நாடு, தமிழகம் என ஆளுநர் பேசுவது வெறும் சொல் விளையாட்டு அல்ல; பிரதேஷ், ராஷ்டிரா என்றாலும் நாடு தான்” என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.

கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜன.05ஆம் தேதி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரும்  கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு எனும் ஹாஷ்டேக்கும் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பொருணை நல்லிணக்க பொங்கல் விழாவில் பங்கேற்ற திருமாவளவன் தமிழ்நாடு - தமிழகம் உபயோகம் குறித்து பேசியவை பின்வருமாறு:

தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்பதற்குள் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கிற வேலை இது. ஆந்திரப் பிரதேஷ் என்கிறார்கள். பிரதேஷ் என்பதற்கும் வட மொழியில் நாடு என்பது தான் பொருள். ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் என வட மொழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். 

மகாராஷ்டிரா. ராஷ்டிரம் என்றால் தேசம் அல்லது நாடு என்று தான் பொருள். இந்த தேசத்துக்கு இந்து ராஷ்டிரா எனப் பெயர் சூட்டவே விரும்புகிறார்கள். மகாராஷ்டிராவுக்குப் போய் ராஷ்டிரா என்று சொல்லக்கூடாது பாரதம் என்று சொல்லுங்கள் எனக் கூறும் துணிவு இவர்களுக்கு உள்ளதா?” என திருமாவளவன் பேசியுள்ளார்.

முன்னதாக ஆளுநரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு என்ற பெயரை ஆதரிக்கும் வகையில், ’தமிழ்நாடு வாழ்க’ என இந்தி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் பதிவிட்டிருந்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு விருந்து அளித்துப் பேசிய கமல்ஹாசன், ”பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான இந்த அரசியலை தடுக்க வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் அல்ல. ஒரு உறவு. நம் நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடுகிறேன். இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே பாரத் ஜோடா யாத்திரை நடைபெறுகிறது.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்ற சொல்லுவதற்கு  ஆளுநர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது” எனப் பேசியிருந்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
தமிழகத்திற்கு தேவையான எரிவாயு அபரிமிதமான அளவிற்கு  இங்கே உள்ளது - காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்தால் அதன் சுமை மறைமுகமாக மக்களை சென்றடையும் -  மாறன்
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Embed widget