மேலும் அறிய

பசுவின் சாணத்தில் லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பசுக்களை ஆதரவின்றி கைவிடுவோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கடந்த மே 30 அன்று பசுக்களை ஆதரவின்றி கைவிடுவோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தரம்பால் சிங் கூறியுள்ளார். தெருவோர மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்கவும் கோரி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங், `யோகி ஆதித்யநாத் அரசு பசு மாடுகளைக் கைவிடும் விவசாயிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது’ எனக் கூறியுள்ளார். 

பசுவின் சாணத்தில்  லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

`விவசாயிக்கும், கறிக்கடைக்காரருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் விவசாயியைக் கவனித்துக் கொள்வோம். கறிக்கடைக்காரரை அல்ல’ எனக் கூறியுள்ளார் தரம்பால் சிங். மேலும், பசு மாடுகளுக்கான கோசாலைகள் தன்னிறைவு பெற்றதாக மாறுவதற்கான பணிகளை மேற்கொண்டு மாநில அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

`பசுக்களுக்கான சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டோம். பசுக்களின் பாதுகாப்புக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். `காட்டு விலங்குகள் தான் சரணாலயத்தில் வாழும்.. பசு என்பது நமது தாய்.. காட்டு விலங்கு அல்ல’ என முதல்வர் கூறியுள்ளார். பசுவின் பால், நெய், தயிர், சாணம் ஆகியவை நல்லவை. பசு மாட்டின் சாணத்தில் கடவுள் லக்‌ஷ்மி வாழ்கிறார். பசு மாட்டின் சிறுநீரில் கங்கா வாழ்கிறார். பசுக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, அவற்றைப் பாதுகாக்கிறோம். அவை தெருவோர விலங்குகள் அல்ல.. தெருவோர விலங்குகளுக்கும், கைவிடப்பட்ட விலங்குகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ என்று உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசியுள்ளார் அமைச்சர் தரம்பால் சிங். 

பசுவின் சாணத்தில்  லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

 

தொடர்ந்து அவர், `பசு மாடுகளைக் கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பசு மாட்டின் பால், சாணம் ஆகியவற்றை அரசே வாங்குவதற்காக திட்டமிட்டு வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். மேலும் பசு சாணத்தில் இருந்து எரிவாயு உருவாக்கும் நிலையங்களை மாநில அரசு உருவாக்குவதற்காகவும் திட்டமிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் இந்த விவகாரம் குறித்து பேசிய போது, பாஜக அரசு பசுக்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி தரும் போது, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தீர்வு காணப் போவதாகக் கூறியிருந்தார். எனினும், இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல், பசுக்களைக் கைவிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக அரசு முன்வந்திருப்பதாகவும் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Embed widget