![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா
திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சியும் மகிழ்ச்சியும் இருக்கும் என்று சொன்னார்கள், ஆனால் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
![இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா Usilampatti Municipal Council President Sakundala joined AIADMK in the presence of EPS - TNN இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/ce38b37e6a630de840813f2ac5171e671706004898566113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில், திமுகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் திமுக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் இன்றைய தினம் திமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மகேந்திரன், சரவணன், மாணிக்கம், நீதிபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் எழுச்சியும் மகிழ்ச்சியும் இருக்கும் என்று சொன்னார்கள், ஆனால் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதற்கு உசிலம்பட்டி நகரமன்ற தலைவர் அதிமுகவில் இணைந்தது சாட்சியாகும் என்றும் கூறினார்.
அப்போது மூன்று பேரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், திமுகவில் மேல்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களைப் போன்றவர்களை செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாக வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் திமுகவைப் பொறுத்தவரை உயர்மட்ட தலைவர்களை சந்திப்பது சாத்தியமில்லாத விஷயம் என்றும் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எளிதாக சந்திக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)