மேலும் அறிய

திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் - கீ.வீரமணி

அனைத்திற்கும் ஆளுநர் தாராளமாக கருத்து சொல்லட்டும். அண்ணாமலைபோல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டு கருத்து சொல்லட்டும்.

திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் சமூக பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நாளொன்றிற்கு 2 மாவட்டங்கள் வீதம் நடத்தபட்டு வருகிறது. கடந்த 3 ம் தேதி ஈரோட்டில் தொடங்கிய தொடர்பயணம் வரும் 10 ம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது. இந்த பரப்புரை பயணத்தின் ஒரு  பகுதியாக நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கீ விரமணி, தமிழகத்தின் ஆட்சியை போல் இந்தியாவில் வேறெங்கும் ஆட்சி நடக்கவில்லை என அனைத்து மாநில மக்களும் பொறாமை கொள்கின்றனர். "திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள்.

மனிதனுக்கு சுதந்திரம் மட்டும் முக்கியமல்ல, சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானது. அதைத்தான் தமிழகத்தில்  திராவிட மாடல் ஆட்சி  என்கிறோம், ஜாதி என்ற வர்னாஸ்ரம  அமைப்பை வைத்து கொண்டு சிலர் செயல்படுகிறார். காதலர்கள் தினத்திற்கு போட்டியாக பசுமாட்டை அரவணைக்க சென்றவர்கள் மனிதனை அரவணைக்க மறுக்கிறார்கள். ஒரே ரேசன் அட்டை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே நாடு என சொல்லும் பாஜக ஆர்.எஸ்.எஸ் மோடி ஆட்சியில் சொல்வது இந்திய பண்முக தன்மைக்கு எதிரானது. அனைத்திலும் ஒரே என சொல்லும் அவர்கள் ஒரே ஜாதி என சொல்ல மறுக்கிறார்கள்.


திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் - கீ.வீரமணி

நாட்டில் சுதந்திரம் இருந்தால் மட்டும் போதாது சமத்துவம் வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதே திராவிட மாடல் தத்துவம். மக்களை மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அது தான் திராவிட மாடல். 50% பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கேட்காமலே கொடுத்தவர் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின். 50% இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றவிடாமல் தடுக்கிறார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரியாரால் திராவிட இயக்கத்தில் போடபட்ட தீர்மானங்களே இன்றைய சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளது. பெண்களை பெற்றோம் கஷ்டபடுகிறோம் என்ற நிலையை மாற்ற உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ₹1000 திராவிட மாடல் ஆட்சியால் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான நிதி நெருக்கடியிலும் குழந்தைக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் அதிகமான கடனை வாங்கி கட்ட வேண்டிய வட்டியையும் அதிகமாக்கி எல்லா துறைகளிலும்  போராட வேண்டிய நிலை தற்போது வருகிறது.1 லட்சத்து 163 எம்.பி.எஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடப்பதில் தமிழகம் தான் முதலிடம். தமிழக குழந்தைகள் முன்னுக்கு வருவதை தடுக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலகல்வி திட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழக ஆளுநர் அவரது வேலையை விட்டு சனாதன பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஆன்லைன் சூதாட்டம் என்பது மகாபாரத கலாச்சாரம். விஞ்ஞானம் வளர்ந்த நிலையிலும் சூதாட்டம் என்ற கொடுமை உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடுமையை தடுக்க பல போராட்டம் நடத்தியதன் விளைவாக அதிமுக ஆட்சியில் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றபட்டது.


திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் - கீ.வீரமணி

தற்போது திமுக ஆட்சியில் குழு அமைத்து சட்டம் இயற்றியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் ஆளுநர் தரவில்லை. திராவிடமாடல் ஆட்சி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க கூடாது என போட்டி அரசாங்கம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் என்ன செய்தாலும் காலூன்ற முடியாது என பாஜக குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து வேலை செய்கிறது. அனைத்திற்கும் ஆளுநர் தாராளமாக கருத்து சொல்லட்டும். அண்ணாமலை போல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டு கருத்து சொல்லட்டும். காரல்மார்க்ஸ், டார்வினை ஆகியோர் பற்றி தெரியாமல் ஆளுனர் பேசுகிறார்.பல இடையூறுகள் செய்தால் , ஆத்திரபட்டு கலவரம் செய்வார்கள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள். மக்கள் என்ற பாறையால் கட்டபட்டது திராவிடமாடல் ஆட்சி , மணல் கோட்டையால் கட்டபட்டதல்ல. வளர்ச்சி வளர்ச்சி என வாயால் பேசியவர்கள் மத்தியில் செயலால் அனைத்தையும் செய்துகாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சி. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் பெயர் வந்துவிடும் என்ற காரணத்தினாலேயே ராமர் பாலம் என்ற வார்த்தையை முன்வைத்து சுப்பிரமணிய சுவாமி போன்றோர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். சேது சமுத்திர திட்டம் தடைபட்டதால் தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. வேலை இல்லா இளைஞர்களை வைத்து கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. ராமர் சேதுவை தேசிய அடையாளமாக அறிவிக்க முடியுமா என பாஜக உறுப்பினர் கேட்டதற்கு ராமர் பாலத்திற்கு ஆதாரம் இல்லை என பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்தர சிங் தெரிவித்துவிட்டார். சேது சமுத்திரத்தில் அமைக்கும் கால்வாய் தமிழன் கால்வாயாக அமையும். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும் நாட்டிற்கு பாதுகாப்பாக அமையும்" என பேசினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget