மேலும் அறிய

"தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" -கே.பி.ராமலிங்கம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தமிழக அரசு தன்னுடைய பங்களிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் - கே.பி.ராமலிங்கம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்காதது, தமிழக முழுவதும் நடைபெறும் லாக் அப் மரணங்கள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காதது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், திமுக அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்றும் குடும்பத்திற்கு தேவையான திட்டத்தினை மட்டுமே செயல்படுத்தி திமுக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். சேலம் மாநகராட்சி உள்பட மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் தமிழக அரசின் சார்பில் செய்து தரப்படவில்லை என்றும் மத்திய அரசு நிதியில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக குறை கூறிய கே.பி.ராமலிங்கம் உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கு என தமிழக அரசு செய்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். திமுக அரசியல் ஸ்டிக்கர் அரசாக உள்ளது குறிப்பாக தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் திமுக நிதி வழங்கியது போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர். தமிழகம் போதை சந்தையாக மாறிவந்துள்ளது என்றும் கல்வி கூடம் திருக்கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக போதைப் பொருள்கள் உள்ளதாகவும்  ஆளுங்கட்சியான திமுகவினர் காவல்துறையில் தலையிடுவதுதான் என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக பாலியல் வன்கொடுமை, லாக்கப் டெத் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் திமுக அரசு தான் என தெரிவித்தார். சமூக நீதி காவலர் என்று தன்னை பெருமை கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்,  மலைவாழ் இனத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு தராமல் மேட்டுக்குடி வேட்பாளருக்கு ஆதரவு தருவது வேதனையாக உள்ளது. மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வரும் திமுக அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை!  அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.