மேலும் அறிய

மோசடி கும்பல் கைது: பாஜகவினரே உஷார்! - கட்சிக்காரர்களை எச்சரித்த நாராயணன் திருப்பதி!

மத்திய அரசின் பெயரில் மோசடி செய்த மோசடி பேர்வழிகளை கைது செய்த தமிழக காவல்துறைக்கு தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று பா.ஜ.க.வினருக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 

போலி ஆணையம்:

"சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், பா.ஜ.க. பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் நண்பர் துரைப்பாண்டியன் கோபால் சாமி மற்றும் சில நண்பர்களுடன் என் அலுவலகம் வந்திருந்தார். மத்திய அரசின் சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையத்தின் (MSME Promotion Council) கூட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். மத்திய அர‌சி‌ன் அங்கீகாரம் பெற்ற அப்படி ஒரு ஆணையம்  இருப்பதாக தெரியவில்லையே என நான் கூறினேன்.  

அப்போதே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அந்த அமைப்பு எ‌ப்படி செயல்படுகிறது என கண்காணித்து வந்த நிலையில், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் MSMEPC பாண்டிச்சேரி மாநில தலைவராக தன்னை நியமனம் செய்ய சிலர் அணுகினார்கள் எ‌ன்று‌ம், அதற்கு ஒரு பெரும் தொகை கேட்பதாகவும் கூறினார்.  அப்படி ஒரு ஆணையமே மத்திய அரசில் இ‌ல்லை என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் நண்பர். 

50 லட்சம் மோசடி:

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று OBC  அணியின் மாநில செயலாளர் எஸ்.வி.பழனிசாமி என்னை தொடர்பு கொண்டு, சேலத்தில் இந்த ஆணையத்தின் நிகழ்ச்சி நடக்கப் போவதாக தெரிவித்தார். இந்த தொல்லை நம்மை  விட மறுக்கிறதே என எண்ணிக் கொண்டே, முதலில் நான் குறிப்பிட்ட நண்பர்கள் துரைப்பாண்டியன் மற்றும் கோபால்சாமி தொடர்பு கொண்டு பேசினேன்.  ஏற்கனவே கோபால்சாமி இந்த ஆணையத்தின் 'தேசிய தலைவர்' என்று தன்னை சொல்லிக்  கொள்கிற முத்துராமன் என்ற நபரிடம் தமிழக தலைவர் பதவிக்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்து, தலைவர் பதவியும் வரவில்லை,  கொடுத்த பணமும் வரவில்லை என்று கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன். 

இதுகுறி்த்து மேலும் விசாரிக்கையில்,  முத்துராமன் எனும் நபர் மேலு‌ம் சிலருடன் சேர்ந்து ம‌த்‌திய அர‌சி‌ன் சின்னத்தை தவறாக பயன்படுத்தி வந்ததோடு,  பிரதமருடன் இருப்பது போன்ற போலி புகைப்படங்களை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததையும், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரையும், பொது மக்களில் பலரையும் பதவி கொடுப்பதாக ஏமாற்றி பண‌ம் வசூல் செய்தது குறித்து அறிந்தேன். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசித்தேன். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு என்னை காவல் துறையில் புகாரளித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். 

அதிரடி கைது:

அதற்கான சில முக்கிய ஆதாரங்களை தமிழக காவல்துறை தலைவருக்கு அனுப்பி போலி ம‌ற்று‌ம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.  கோபால்சாமியை உடனடியாக சேலத்தில் புகார் அளிக்க செய்தேன். மேலும், சில வருடங்களுக்கு முன் இதே போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார் என்ற நபரை கைது செய்ய உறுதுணையாக இருந்த சேலம் மாவட்ட துணைத்தலைவர் 'ஸ்பீடு' செல்வராஜை தொடர்பு கொண்டு கண்காணிக்க சொன்னதன் அடிப்படையில், காவ‌ல்துறை‌யின‌ரிடம் ஒருங்கிணைந்து நம் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இ‌ந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை  உறுதிப்படுத்தியதையடுத்து, திங்கள்கிழமையன்று  முத்துராமன் எ‌ன்ற நபரும் அவருக்கு துணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக தொழில் அணி தலைவர் கோவர்த்தனன் மோசடி நபர்  முத்துராமன் குறித்து மதுரை புறநகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோவர்த்தனன்  தொடர்புடைய அமைச்சர் அலுவலகத்தை திங்களன்று தொடர்பு கொண்டு, இந்த மோசடி பேர்வழிகள் குறித்து விளக்கி,  அமைச்சகத்தின் மூலமும் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்து கொண்டிருக்கிறார்.

டி.ஜி.பி.க்கு நன்றி:

பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  இந்த விவகாரத்தில் எனக்கு  உறுதுணையாக இருந்த திருப்பூர் துரைப்பாண்டியன்,  சேலம் கோபால்சாமி, சேலம் Selvaraj Sn  மாநில தொழில் அணி தலைவர்  கோவர்த்தனன், மாநில OBC அணி செயலாளர், கோவை பழனிசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.  

குறிப்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள் என்று பணித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவி்த்துக் கொள்கிறேன். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் பாஜக வினர் விழிப்புடன் இருப்பதுடன், சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க பாடுபடும்படி கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Embed widget