செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டாஸ்மாக் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நிலையில், நேற்று உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இன்று உச்சநீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திமுக மாஜிக்களுக்கு குறி
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, சிவசங்கர், தாமோ அன்பரசன் என அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் குறிவைத்தனர். தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழங்கில் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார்.
டாஸ்மாக் முறைகேடு- செந்தில் பாலாஜிக்கு செக்
இந்த நிலையில் அடுத்த வழக்காக திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த்தாக லஞ்ச ஒழிப்பு துறை செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அளித்த நிலையில்,
முன் ஜாமின் மனு தள்ளுபடி
அப்போது போலீசார் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதனையடுத்து எந்த நேரமும் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தலைமறைவானர். அதே நேரம் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், இன்று விசாரணையின் போது ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் தவெக அரசு கையில் எடுத்துள்ளதாக வாதிடப்பட்டது. எனவே செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் எனவும் உறுதியளிக்கப்பட்டது. எனவே செந்தில் பாலாஜியை கைதுசெய்யக் கூடாது எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், 'டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்டவர், எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளதாக என வாதிட்டார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கைது செய்ய தடை விதித்த அவர், செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாடசிகளை கலைக்க கூடாது என கூறிய நீதிபதிகள் நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















