மேலும் அறிய

நியாயவிலைக் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை - ராதா கிருஷ்ணன் அதிரடி

நியாய விலைக் கடை பொருட்களை கடத்துவது தொடர்பான செயல்பாடுகளில் அதிகாரிகள் உள்ளிட்ட யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலம் சார்பில் தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டி மூன்றாவது ஆண்டாக "U Genious 3.0" என்ற பெயரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சென்னை நகர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 500 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மற்ற விருந்தினர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சம் அளவிலான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள்  அடுத்தட்கட்டமாக  கோயம்புத்தூரில் அக்டோபர் மாதம் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

ஏற்கனவே திருச்சி, சேலம், மதுரை, கொச்சியில் இந்த வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.வரும் நவம்பர் 7 ஆம் தேதி இதன் இறுதி போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இராதாகிருஷ்ணன் ; 

வரும் காலங்களில் உலக அளவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் படிப்பும், திறமையும் மிக முக்கியம்.

வேகம், கவனம், நேரம், கல்வி, உங்கள் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் இந்த வினாடி வினா போட்டி மூலம் கிடைக்கும். இது மாதிரியான போட்டிகள் சிவில் சர்வீஸ் தேர்வு போன்றவற்றிற்கு எல்லாம் முதல் படி போன்றது. 

இது போன்ற வினாடி வினா போட்டிகளை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நடத்துவதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் ; 

இந்த வினாடி வினா போட்டி மாணவர்கள் மத்தியில் பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் ஊக்குவிக்கும். 

கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை பொருத்தவரை பறந்து விரிந்த துறை. 35,000 நியாய விலை கடைகளை மட்டும் பார்க்கிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் எல்லாம், கூட்டுறவு கடைகள் அதிகம் இருக்கும். 

தமிழகத்தை பொறுத்தவரை 26 வகையான கூட்டுறவு வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. மக்களால் செயல்படக்கூடியது தான் கூட்டுறவுத்துறை. இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் இந்த செப்டம்பர் மாதம் தேவைக்கேற்ப விவசாய சங்கங்களிடம் பேசி நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் தமிழகத்தில் தான் தொடங்கியுள்ளன. நபார்டு வங்கி மூலம் விளிம்பு நிலையில் உள்ள நாட்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

பால் மீன் கூட்டுறவு துறைகளும் உள்ளன. அது குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

நியாய விலை கடைகளை பொருத்தவரை ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் வாங்காதவர்களுக்கு பொருட்கள் கொடுக்கக் கூடாது. இது உணவு பாதுகாப்பு திட்டம் இதனை சத்துணவு பாதுகாப்பு திட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லைப் பகுதிகள் மட்டும் இல்லாமல் உட்புற நகரங்களிலும் கடத்தல் தொடர்பான விஷயங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யார் தலையீடு இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

மழைக்காலங்களைப் பொறுத்தவரை கூட்டுறவுத் துறையில் தேவையான பொருட்களை ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளை பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

தலைப்பு செய்திகள்

NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget