மேலும் அறிய

AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

’நான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசியது உண்மை, இப்போது இருக்கும் அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும் சசிகலா காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே என ஓபனாக உடைத்து பேசியிருக்கிறார் அன்வர்ராஜா’

கடந்த 24ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சச்சரவின் தாக்கம் இன்னும் அடங்காதநிலையில், மீண்டும் அந்த பிரச்னைக்கு திரிகொளுத்தியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா.AnwarRaja :  ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

கூட்டம் நடைபெறும்போதே அன்வர்ராஜாவை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தார் என்ற தகவல் வந்த நிலையில், அப்படி நடந்தது உண்மைதான் என ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் நேர்காணலில் போட்டு உடைத்திருக்கிறார் அன்வர்ராஜா.

தான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், சிவி சண்முகம் உள்ளிட்டோர் எழுந்து சத்தம் போட்டு, நான் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம்தான் சமாதானம் செய்து வைத்தார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கும் அன்வர்ராஜா. எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார்.AnwarRaja :  ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

அதுமட்டுமின்றி, சசிகலா எங்களுக்கு எப்போதுமே சின்னமாதான் என்றும் அதிமுகவில் இப்போது இருக்கும் அத்தனை தலைவர்களும் அவரது காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே எனவும் ஆவேசமாக பேட்டி அளித்துள்ள அன்வராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கும் அன்வர் ராஜா, அவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் கூட்டணி போட்டதால்தான், இந்த அளவுக்கு அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது என வெடித்து பேசியிருக்கிறார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ், நான் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அளித்த பேட்டி, தன்னை மிகவும் வருந்த செய்தது என்றும் பேசினார் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா பற்றியோ அல்லது ஒற்றைத் தலைமை குறித்து ஒருவரும் வாய்த் திறக்காமல் இருந்ததாகவும், செங்கோட்டையன் மட்டுமே வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, எண்ணிக்கையையும் 11லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று பேசினார் எனவும் அன்வர்ராஜ தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், அதிமுக தலைமையை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான், சசிகலா எங்களுக்கு எப்போதும் சின்னமாதான், சிவி சண்முகம் தன்னை தாக்க முயன்று கைகளை உயர்த்தியது உண்மை, ஜெயக்குமார் குறித்து ஓபிஎஸ் வருந்தினார் என இந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார் அன்வர்ராஜா. தொடர்ந்து இப்படி அன்வர்ராஜா வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசிவருவதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைமை அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget