மேலும் அறிய

அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?

"பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது"

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவராக செயல்படுவார் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது"

தந்தை மகன் மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பாமகவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகின்றன. தங்களுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்ததாக, அன்புமணி ராமதாஸ் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வந்தது. 

டெல்லியில் ராமதாஸ் ஆதரவாளர்கள் 

இந்தநிலையில் தேர்தல் ஆணையம் மூலம் அன்புமணி ராமதாஸ் கிடைத்த அங்கீகாரத்தை ரத்து செய்து, எப்படியாவது தங்கள் தரப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து பலமுறை டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் மனுவை அளித்து வந்தனர். அதேபோன்று தனியாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியும், ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.‌ இந்தநிலையில் ராமதாஸ் தரப்பின் புகார் மனுவிற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், அன்புமணி ராமதாசை கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளது.

அன்புமணிக்கு அங்கீகாரம் 

ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி சேலம் அருள் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தை நாடி நாங்கள் தான் உண்மையான பாமக எங்கள் தரப்பை ஆதரிக்க வேண்டும் என மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில், அன்புமணி தரப்புக்கு தான் மாம்பழம் சின்னம் எனவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. தற்போது டாக்டர் ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி அதர்வாளர்கள் கருத்து என்ன ?

இதுகுறித்து அன்புமணி ஆதரவாளர்களிடம் விசாரித்த போது: ஒரு கட்சியின் தலைவரை பொதுக்குழு கூடி தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் தலைவராக இருந்தபோது, அவரை செயல் தலைவராக நியமனம் செய்ததே சட்டப்படி தவறு. அப்படி இருக்க செய்தியாளர்கள் சந்திப்பில், தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் கூறியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. 

பாமகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பேரும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே முழு அங்கீகாரம் வழங்கப்படும். அந்த வகையில் தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, அன்புமணி ராமதாசுக்கு தலைவர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைதான் ஆரம்பத்தில் இருந்தே, வலியுறுத்தி வருகின்றோம். எங்கள் தலைமையில் இருப்பதுதான் உண்மையான பாமக. அன்புமணி ராமதாஸ் தான் வருகின்ற தேர்தலில், கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு ஏ ஃபார்ம் மற்றும் பி ஃபார்ம் ஆகியவற்றில் கையெழுத்து போட அதிகாரம் படைத்தவர் என தெரிவித்தனர். 

ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் ?

இத தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளர்களிடம் பேசவையில், ஏற்கனவே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அன்புமணி தரப்பு முறைகேடாக அங்கீகாரத்தை பெற்றதாக தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget