மேலும் அறிய

Ponmudi: மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சிப் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கும் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு மீண்டும் ஒரு பதவியை கொடுக்க ஸ்டாலின் இறங்கி வந்துள்ளதாகவும் சொல்கின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி

திமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த பொன்முடி, தனது சர்ச்சையான கருத்துகளாலேயே சரிவை சந்தித்தார். அதோடு சேர்த்து, விழுப்புரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த அவரது செல்வாக்கும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் வளர ஆரம்பித்தார். விழுப்புரம் கட்சி நிகழ்ச்சி பேனர்களில் கூட பொன்முடியும் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், என்னதான் விழுப்புரத்தில் லட்சுமணன் கொடிகட்டிப் பறந்தாலும், திமுக தலைமையிடம் பொன்முடியை தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியாமல் திணறுகிறாராம். 

துணை பொதுச்செயலாளர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் இழந்ததால் தான் விழுப்புரத்தில் பொன்முடியின் செல்வாக்கு குறைவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். ஆனால் பதவிகளை இழந்தாலும், பொன்முடி கட்சி தொடர்பாக அவதூறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளையும் தவிர்க்காமல் கலந்து கொண்டார். இனி இப்படி எதுவும் சர்ச்சையாக பேச மாட்டேன் என ஸ்டாலினிடம் அவர் உறுதி கொடுத்து சமரசமாக போய்விட்டதாகவும் பேச்சு இருக்கிறது.

தலைமையிடம் உயர்ந்த செல்வாக்கு

ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பொன்முடியும் அவருடன் வந்திருந்தார். இப்படி திமுக தலைமையிடம் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், விழுப்புரத்தின் அடையாளமாக, கட்சியின் உயர் பதவிகளில் பொன்முடி இருக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்புகின்றனர். அந்த இடத்தை பிடித்து அமைச்சரவையில் நுழைய லட்சுமணன் முயற்சி செய்தாலும், பொன்முடியின் அனுபவத்தையும், கட்சித் தலைமையுடனான நெருக்கத்தையும் தாண்டி, அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற பேச்சு இருக்கிறது. விழுப்புரத்தில் லட்சுமணன் கைகள் ஓங்கினாலும், பொன்முடி விவகாரத்தில் அவர் மீது தலைமையிடம் புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்டாலினின் முக்கிய முடிவு

இந்த நிலையில், பொன்முடியிடம் மீண்டும் தலைமைக் கழக பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். துணை பொதுச்செயலாளர் பதவியின் எண்ணிக்கையை அதிகரித்து, மீண்டும் அவருடையே பதவியையே கொடுக்கலாமா அல்லது புதிதாக பதவி உருவாக்கி கொடுக்கலாமா என ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எப்படியோ, மறுபடியும் கட்சியில் பதவியை பிடிக்கப்போகும் பொன்முடி, மீண்டும் சர்சைகளில் சிக்காமல், வாயை கட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே, திமுக தொண்டர்கள், குறிப்பாக பொன்முடியின் ஆதரவாளர்களின் வேண்டுதலாக உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget