மேலும் அறிய

`தமிழர்களின் உணர்வைத் தூண்டுகிறது காங்கிரஸ்’ - நாடாளுமன்றத்தில் கொதித்த பிரதமர் மோடி!

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தமிழர்களைக் குறித்து பேசியதைப் பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தமிழர்களைக் குறித்து பேசியதைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், `என் தமிழ் சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கில் சாலையில் திரண்டு, மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போது, கண்களில் கண்ணீரோடு `வீரவணக்கம்.. வீரவணக்கம்’ என முழக்கமிட்டுச் சென்றனர். இது தேசத்தின் அடையாளம்’ எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்’ என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். நீட் தேர்வில் தமிழகம் தொடர்ந்து விலக்கு கோருகிறது. ஆனால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்து மனம் தளராமல் தமிழகம் கேட்டுக்கொண்டுக்கிறது” எனப் பேசினார். இது வைரலானது.

`தமிழர்களின் உணர்வைத் தூண்டுகிறது காங்கிரஸ்’ - நாடாளுமன்றத்தில் கொதித்த பிரதமர் மோடி!

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்குப் பதிலளித்துப் பேசினார். அதில் அவர், `சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியை இந்தியாவைப் பிரிக்க திட்டமிடுகிறது. அவர்களின் கொள்கையே பிரித்தாளும் சூழ்ச்சி தான். என் தமிழ் சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கில் சாலையில் திரண்டு, மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போது, கண்களில் கண்ணீரோடு `வீரவணக்கம்.. வீரவணக்கம்’ என முழக்கமிட்டுச் சென்றனர். இது தேசத்தின் அடையாளம். முப்படைத் தளபதியைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இது என்னுடைய நாடு என்று நான் சொல்வதை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே வெறுத்து வருகிறது. பிரித்தாள்வது என்பது காங்கிரஸின் டி.என்.ஏவில் இருக்கிறது’ எனக் கடுமையாக சாடியுள்ளார்.

`தமிழர்களின் உணர்வைத் தூண்டுகிறது காங்கிரஸ்’ - நாடாளுமன்றத்தில் கொதித்த பிரதமர் மோடி!

பிரதமரின் இந்தப் பேச்சைத் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget