மேலும் அறிய

Caste Census: எடுபடாத ராமர் கோயில், உ.பி., கொடுத்த தோல்வி, சாதி வாரி கணக்கெடுப்பில் குதித்த மோடி - தேர்தல் கணக்கு

Caste Census Politics: ராகுல் காந்தியின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தற்கான காரணங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Caste Census Politics: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியாகியுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராகுலின் கோரிக்கையும் - மத்திய அமைச்சரவை ஒப்புதலும்:

நாட்டில் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒபிசியினருக்கு, அரசு நிர்வாகத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், இதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு,திடீரென சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு வரலாறு:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931ம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி வாரி கணக்கெடுப்பு என்பது வழக்கமானதாக இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டது. பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட்டது.  கடந்த 1961ம் ஆண்டு முதல் மாநில அரசுகளே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவும், தேவைப்பட்டால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவரங்களை தொகுக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு முக்கியமானது ஏன்?

சாதி சார்ந்த தரவுகள் மட்டுமின்றி, ஆழமான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை சாதி வாரி கணக்கெடுப்பு நிகழ்த்தும். இந்த தரவுகள் உறுதியான செயல் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவும் , பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும், வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும் உதவும். இந்தியாவில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது. இவை சாதி, பிராந்தியம், மதம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளால் வடிவமைக்கப்படுகிறது. இதில் உள்ள பிரச்னைகளை கண்டறியவும், அனைவரையும் உள்ளடக்கிய சமமான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைக்கவும் சாதி வாரி கணக்கெடுப்பு ஆதரவளிக்கிறது.

இப்போது கணக்கெடுப்பு ஏன்?

பெரும்பாலானோருக்கு இப்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன்? என்பதே கேள்வியாக உள்ளது. அரசியல் ரீதியாக நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலே பிரதான காரணமாக கருதப்படுகிறது. சி வோட்டர்ஸின் லேட்டஸ்ட் சர்வேயில் பீகார் முதலைமைச்சர் வேட்பாளர் என்ற கணக்கெடுப்பில்,  தேஜஸ்வி முதல் இடத்திலும் அதாவது கிட்டத்தட்ட 40 சதவீதமும்,  இரண்டாவது இடத்தில் பிரஷாந்த் கிஷோரும் (18%), நிதிஷ்குமார் (15%)  மற்றும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் (10%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பீகாரில் ஆட்சியை பிடிப்பதில் ஓபிசி தலைவர்கள் முன்னணியில் இருக்கும் சூழலில் தான், சாதி வாரிக் கணக்கெடுப்பு எனும் ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

எடுபடாத ராமர் கோயில்

அயோத்தி ராமல் கோயில் தேர்தலில் தங்களுக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும் என பாஜக கருதியது. ஆனால், மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 43 இடங்களை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மைனாரிட்டி அரசு அமைத்ததற்கு, அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த உத்தரபிரதேச மாநிலத்தில் தோல்வியுற்றது முக்கிய காரணமாகும். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றால், அது வரும் 2027ம் ஆண்டில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக நம்புகிறது. இதன் காரணமாகவே எந்தவொரு சூழலிலும் பீகாரில் தோல்வி காண கூடாது என பாஜக, சாதி வாரி கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது.

அடுத்து என்ன செய்யும் பாஜக அரசு?

இந்திய அரசாங்கம் குடிமக்களை சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடத்தப்படும் சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம், மக்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அரசால் அறிய முடியும்.  குறிப்பாக பொது வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களை அணுகுதல் போன்ற துறைகளில். அரசாங்க முயற்சிகளால் எந்த சமூகங்கள் பயனடைந்துள்ளன, எந்த சமூகங்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளன என்பதை அடையாளம் காண முடியும். அதனடிப்படையில் எதிகாலத்திற்கான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என அரசு தீர்மானிக்கும்.

தோல்வி பயம்:

அதன்படி, ஓபிசி சமூகத்தினர் நிறைந்து பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற முக்கிய மாநிலங்களில், அவர்களை மையப்படுத்திய பல தேர்தல் அறிக்கைகள் மற்றும் திட்டங்களை அள்ளி வீசும் நோக்கிலேயே மத்திய அரசு தற்போது சாதி வாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டும் 120 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒருவேளை அங்கு ஆட்சியை இழந்தால், அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவின் பாடு திண்டாட்டமாகிவிடும். இதன் காரணமாகவே பாஜக ராமர் கோயிலை விடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் மீண்டும் ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget