மேலும் அறிய

OPS: 'அதிமுக என்னிடம் இருக்கிறது.' - தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்! அடுத்தக்கட்ட நகர்வு!

இருதரப்புமே, அதிமுக நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கான வேலையை தற்போது ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டது. இது ஒருபுறம் நடக்க, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே அதிமுக அலுவலகத்துச் சென்றார் ஓபிஎஸ். கல்வீச்சு, அடிதடி என இரு தரப்பு ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொண்ட நிலையில் அதிமுக அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது.

ஒருபக்கம் ஈபிஎஸ்ஸுக்கு பதவி , ஓபிஎஸ்-ன் பதவி பறிப்பு என பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் தான் வந்த வாகனத்தில் ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றினார் ஓபிஎஸ். இப்படி பல பரபரப்புகளை நேற்று முடிந்த நிலையில் இன்று அதிமுக யார் பக்கம் இருக்கிறது என்ற சந்தேகத்துடன் குழம்பியுள்ளனர் அதிமுக தொண்டர்கள். இருதரப்புமே, அதிமுக நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கான வேலையை தற்போது ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.


OPS: 'அதிமுக என்னிடம் இருக்கிறது.' - தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்! அடுத்தக்கட்ட நகர்வு!

ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரையும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுக தற்போதும் என்னிடம்தான் இருக்கிறது என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை வங்கிக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இனி வரவு செலவு கணக்குகளை அவர் கவனிப்பார் என குறிப்பிட்டிருந்தார். 

முன்னதாக, ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவின் ஆவணங்களை அவருடைய ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும், இதற்கு வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளரான பாலச்சந்திரன் ( வயது 34), திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சீனிவாசன் ( வயது 40), 171வது வடக்கு வட்ட கழகச்செயலாளர் கார்டன் செந்தில் ( வயது 40) மயிலாப்பூர் பகுதி இணைச்செயலாளர் தினேஷ் ( வயது 36), 113வது வட்ட உறுப்பினர் மார்க்கெட் சுந்தர் ( வயது 33), சேப்பாக்கம் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் ( வயது 38), 120வது கிழக்கு வட்டதுணைச் செயலாளர் முரளிகிருஷ்ணன் (வயது 30), விருகம்பாக்கம் வடக்குபகுதி கழக பொருளாளர் விநாயகமூர்த்தி (வயது 46), விருகம்பாக்கம் 128வது வட்ட அவைத்தலைவர் செல்வம் (வயது 58), திருவல்லிக்கேணி இளைஏஞர் பாசறை துணைச்செயலாளர் லோகேஷ் (வயது 26) கோடம்பாக்கம் 112வது வட்ட மேலவை பிரதிநிதி பாபு, (வயது 62), 112வது வட்ட அவைத்தலைவர் குட்டி (வயது 48), 120வது மேற்கு வட்ட செயலாளர் வின்சென்ட் ராஜ் (வயது 38), 111வது வட்ட கழகச் செயலாளர் சால்னா சேகர் (வயது 52) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget