மேலும் அறிய

தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளார்கள் - அண்ணாமலை

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள் எல்லாம் குப்பை தொட்டிக்கு சென்று விட்டது - அண்ணாமலை

விழுப்புரம் : தமிழகத்தில் ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியலும் மக்களுக்கான ஒரு அரசியல் உள்ளதால் தமிழக அரசியம் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளதாகவும் இன்னும் 40 நாட்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நகர பகுதியான காந்தி சிலையிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நான்கு முனை சந்திப்பு வரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் அரசியல் முழுமையாக மாற்றப்பட வேண்டும் மக்களுக்கான ஒரு அரசியல் ஆளுகின்றவர்களுக்கான ஒரு அரசியலாக தமிழகத்தில் உள்ளதாகவும், ஆளுகின்றவர்களின் பிள்ளைகள் மூன்று மொழிகள் கற்று கொள்வதாகவும், ஆனால் பொது மக்களின் பிள்ளைகள் இரண்டு மொழிகள் கற்று கொள்ளும் அரசு பள்ளியில் பயிலும் நிலை தான் உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளதாகவும், விழுப்புரத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வருமான உற்பத்தி 2.6 சதவிகிதமும், மனித வளர்ச்சி மிக குறைவான அளவே உள்ளதாக கூறினார்.

திமுக ஒரு பக்கம் மாநாடும் அவரது கூட்டணி கட்சி விசிக ஒரு பக்கம் மாநாடு நடத்தி மத்திய அரசு எதிராக பத்து தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள் அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரக்கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இதனை கொண்டு வரவேண்டும் என்று கூறியதே திமுகவின் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான் என்றும் பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பியது  குறித்து திமுக கூட்டணியிலுள்ள திருமாவளவன் பேசவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பட்டியலின அமைச்சர்கள் 12 பேர் உள்ளனர். ஆனால் திமுகவில் மூன்று பேர் மட்டுமே அமைச்சராக உள்ளதாக கூறுகிறார். தண்ணீரில் மலம் கலந்தது, பட்டியலின பெண் தாக்கப்பட்டது குறித்து திருமாவளவன் மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்று உறுதியாக உள்ளதாகவும், திமுகவில் தொண்டர்கள் யாரும் எம் எல் ஏக்களாக ஆக்கப்படாமல் அடுத்த தலைமுறை வாரிசுகள் தான் வருவதாகவும், இந்தியாவிலையே மோசமான கட்சியும் ஆட்சியும் திமுக தான் தெரிவித்தார். 

டீ போடுபவருக்கு டீ எப்படி போடுகிறார் என்று  தகுதி  பார்க்கும் நாம் யார் ஆள தகுதியுடையவர்கள் என்று மக்கள் பார்ப்பதில்லை. நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள் எல்லாம் குப்பை தொட்டிக்கு சென்று விட்டதாகவும், யார் ஒருவன் உன்மையான இந்துவாக உள்ளானோ அவன் கிருஸ்துவனுக்கும், இஸ்ஸாமியர்களுக்கு நண்பணாக இருப்பான் அதற்கு உதாரணம் தான் மோடி என பெருமிதம் கூறினார். 

இஸ்ஸாமிய சகோதர சகோதிரிகளுக்கு உண்மையான விடுதலை என்பது பாஜக ஆட்சியில் தான் கிடைக்கும் என்றும் பொன்முடி வைப்பு நிதியாக 41 கோடி ரூபாய் செலுத்தியதை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது வழக்கு என்று அவர் மீது உள்ளது. அவரால் தப்பிக்கவே முடியாது என்றும் இருண்ட தமிழகத்தை பாஜக மீட்டெடுக்கும் என்றும் திமுக காரர்களே கூறுவதாக அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என கூறினார்கள்.

ஆனால் இதுவரை பத்தாயிரத்து 320 பேருக்கு மட்டுமே கொடுத்துள்ளதாகவும் இவர்கள் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற வார்த்தையை இவர்களுக்கு பயன்படுத்தலாம் என்றும்  சாமான்யர்களுக்கான ஆட்சியாளர்கள் தமிழகத்தில் இல்லை இன்னும் 40 நாட்களில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் பாஜக  அண்னாமலை கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
Embed widget