மேலும் அறிய

மக்களுடன் தான் கூட்டணி! - சீர்காழி தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷ்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28 வயதான இளைஞர் சுபாஷ் வேட்பாளராகப் போட்டியிட்டு நிலையில் சட்டநாதர் கோவிலில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

சீர்காழி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. ஆன்மீகம், சுற்றுச்சூழல் மற்றும் தொகுதி மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தி அக்கட்சியின் வேட்பாளர் சுபாஷ் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

சட்டநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிகிராமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சுபாஷ் என்பவரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை சீர்காழியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை தந்த வேட்பாளர் சுபாஷ், அங்குச் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சாமி தரிசனம் செய்த அவர், தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலனிக்காகவும் வேண்டிக்கொண்டார். கோவிலுக்கு வெளியே வந்த அவருக்கு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பசுமைப் புரட்சி மற்றும் துண்டுப் பிரசுரம்

வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலன்றி, சுற்றுசூழலைப் பாதுகாக்கும் விதமாகத் தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, பசுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "மரம் வளர்ப்பது என்பது வெறும் அரசியல் கிடையாது, அது நம் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி" என்று அவர் மக்களிடம் உரையாற்றினார்.

தொடர்ந்து, "மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு" என்ற பெயரிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர், விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். இந்தத் துண்டுப் பிரசுரங்களில் கட்சியின் கொள்கைகள் மற்றும் தொகுதிக்கான வாக்குறுதிகள் விரிவாக இடம்பெற்றிருந்தன.

சீர்காழி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் சுபாஷ், சீர்காழி தொகுதிக்கான தனது திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். அவர் கூறியதாவது:

"மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் வசதிக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனையை மாவட்ட அளவிலான மருத்துவமனையாக (District Hospital) தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

மேலும், எங்களது தொகுதியில் உள்ள திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஆகிய ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு, அந்த இடங்களைச் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், விவசாயிகளின் நீராதாரம் பெருகி விளைச்சல் அதிகரிப்பதையும் உறுதி செய்வோம்."

கூட்டணி குறித்த அதிரடி நிலைப்பாடு

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குச் சுபாஷ் மிகவும் கறாரான பதில்களை அளித்தார்,

"நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் தமிழக மக்களுடன் 234 தொகுதிகளிலும் கூட்டணி வைத்துள்ளது. தீமைக்கு மாற்று மற்றொரு தீமை கிடையாது. நாங்கள் மதுவற்ற தமிழகத்தை உருவாக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறோம். அப்படி இருக்கும்போது, மதுக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் கட்சிகளுடன் நாங்கள் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? எங்களுடன் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

திராவிடக் கட்சிகள் ஊழலற்ற, கரைபடியாத கட்சிகள் கிடையாது. உண்மையான மாற்று அரசியல் என்று பேசும்போது, பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளுடன் கைகோர்ப்பது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தனித்துவமான கொள்கைகளுடன், விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம்," என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

மக்களிடையே எழுந்துள்ள எதிர்பார்ப்பு

இளைஞரான சுபாஷ், தனது பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே உள்ளூர் பிரச்சனைகளான மருத்துவமனை தரம் உயர்த்துதல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசியது தொகுதி மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியின் இந்தத் தேர்தல் தொடக்கம், சீர்காழி தொகுதியில் மும்முனைப் போட்டியை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் விழிப்புணர்வு கொண்ட வாக்காளர்களை இலக்காகக் கொண்டு, தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
கழகங்கள் மறையட்டும்... நம்ம கொடி பறக்கட்டும்!! கோவையில் அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்...
கழகங்கள் மறையட்டும்... நம்ம கொடி பறக்கட்டும்!! கோவையில் அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்...
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
“இது மக்கள் ஆட்சியா... ரீல்ஸ் ஆட்சியா?” – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி...
“இது மக்கள் ஆட்சியா... ரீல்ஸ் ஆட்சியா?” – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி...

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி மோதல்! நடந்தது என்ன?
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி மோதல்! நடந்தது என்ன?
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Embed widget