மேலும் அறிய

”மன்மோகன் சிங்கை பாஜக இறுதியில் அவமதித்துவிட்டது” கொந்தளித்த ராகுல், ஸ்டாலின்..இறுதிச் சடங்கில் நடந்தது என்ன?

Manmohan Singh Funeral Insulted: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, இறுதிச் சடங்கில் அவமதித்து விட்டதாக ராகுல் , ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் இரவு காலாமானதை தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி இன்று நடைபெற்றது. அவரது இறுதி அஞ்சலியானது, டெல்லியில் உள்ள நிகம் போகத் தகன மைதானத்தில் நடந்தது. அவரது உடலானது அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்காமல், நிகம் போகத் தகன மைதானத்தில் இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

 

ராகுல் காந்தி:

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் , மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்ததாவது  “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "பாரத மாதாவின் சிறந்த மகனும், முதல் சீக்கிய பிரதமருமான மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நிகம்போத் காட்டில் வைத்து அவமதிக்கப்பட்டார். பத்தாண்டு காலம், இந்தியாவை பிரதமராக வழிநடத்தி, தேசத்தை மாற்றினார். அவரது கொள்கைகள் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தின.
"இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் மதித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இறுதி சடங்கு  செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்த சிரமமும் இன்றி இறுதி தரிசனம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். 

மன்மோகன் சிங் எங்களின் மரியாதைக்குரியவர். அரசாங்கம், நாட்டின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது பெருமைமிக்க சமூகத்திற்கும் மரியாதை காட்டியிருக்க வேண்டும், ”என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

காங்கிரஸ் தலைவர் கார்கே:

மேலும், காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்ததாவது “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் , “ அவரது இறுதி சடங்கு நடைபெறும் இடத்திலேயே நினைவகம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

முன்னாள் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவானது, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை  அவமதிப்பதாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட சம்பவமானது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு விளக்கம்:

இந்நிலையில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்ததாவது “ நினைவிடம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்துள்ளார். ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னரே நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் என்பதால் , தற்போது இறுதிச் சடங்கு நடைபெறட்டும் என உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்திலேயே , நினைவகம் அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், மத்திய அரசு மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Embed widget