மேலும் அறிய

"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!

18ஆவது மக்களவையின் முதல் அமர்வில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

18ஆவது மக்களவையின் முதல் அமர்வு இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக அமைந்ததை தொடர்ந்து புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், மக்களவை கூடியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், இடைக்கால சபாநாயகர் பதவி விவகாரம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே பெரும் பிரச்னையாக வெடித்தது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் அமர்வு:

நீண்ட காலம் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கே இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், எட்டாவது முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் தொடர்ச்சியாக எம்பியாக பதவி வகிக்கவில்லை எனக் கூறி, ஏழாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 18ஆவது மக்களவையின் முதல் அமர்வுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஒன்றாக சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அங்கிருந்து அணிவகுத்து நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.

ஆரம்பமே அமர்க்களம் செய்த எதிர்க்கட்சிகள்: 

அங்கு அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியப்படி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். தார்மீக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும், ஆணவம் அப்படியே தொடர்வது தெளிவாகிறது. பல முக்கியமான விஷயங்களில் மோடி ஏதாவது பேசுவார் என்று தேசமே எதிர்பார்த்தது.

நீட் மற்றும் பிற பணி நியமன தேர்வுகளில் வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்களிடம் அவர் கொஞ்சம் அனுதாபம் காட்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி, ஊழலுக்கு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து மற்றும் ரயில்வேதுறையின் தவறான நிர்வாகம் குறித்து மோடி மெளனம் காத்தார்.

மணிப்பூர் விவகாரம்:

கடந்த 13 மாதங்களாக வன்முறையின் பிடியில் மணிப்பூர் உள்ளது. ஆனால், அந்த மாநிலத்திற்கு செல்ல மோடி முனைப்பு காட்டவில்லை. அங்கு நடந்து வரும் புதிய வன்முறை சம்பவங்கள் குறித்து தனது உரையில் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, விலைவாசி உயர்வு, வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு, கருத்துக்கணிப்பு - பங்குச் சந்தை ஊழல் என அனைத்திலும் மோடி அமைதி காத்து வருகிறார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் மோடி அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூட பிரதமர் மோடி முற்றிலும் மவுனம் காக்கிறார்.

நரேந்திர மோடி நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால் முடிவுக்கு வந்துள்ளது. மோடிக்கு எதிராக மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் அவர் பணியாற்ற வேண்டும்.

"மக்களுக்கு உபயோகமான விஷயங்களே தேவை, கோஷங்கள் அல்ல" என பிரதமர் சொல்கிறார். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள். எதிர்க்கட்சிகளும் இந்திய மக்கள் கூட்டணியும் நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை விரும்புகின்றனர்.

 

நாங்கள் மக்களவையில், தெருக்களில் மற்றும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Amit Shah again in Tamil Nadu: தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! சபதத்தோடு களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
Embed widget