மேலும் அறிய

"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!

18ஆவது மக்களவையின் முதல் அமர்வில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

18ஆவது மக்களவையின் முதல் அமர்வு இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக அமைந்ததை தொடர்ந்து புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், மக்களவை கூடியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், இடைக்கால சபாநாயகர் பதவி விவகாரம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே பெரும் பிரச்னையாக வெடித்தது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் அமர்வு:

நீண்ட காலம் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கே இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், எட்டாவது முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் தொடர்ச்சியாக எம்பியாக பதவி வகிக்கவில்லை எனக் கூறி, ஏழாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 18ஆவது மக்களவையின் முதல் அமர்வுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஒன்றாக சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அங்கிருந்து அணிவகுத்து நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.

ஆரம்பமே அமர்க்களம் செய்த எதிர்க்கட்சிகள்: 

அங்கு அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியப்படி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். தார்மீக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும், ஆணவம் அப்படியே தொடர்வது தெளிவாகிறது. பல முக்கியமான விஷயங்களில் மோடி ஏதாவது பேசுவார் என்று தேசமே எதிர்பார்த்தது.

நீட் மற்றும் பிற பணி நியமன தேர்வுகளில் வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்களிடம் அவர் கொஞ்சம் அனுதாபம் காட்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி, ஊழலுக்கு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து மற்றும் ரயில்வேதுறையின் தவறான நிர்வாகம் குறித்து மோடி மெளனம் காத்தார்.

மணிப்பூர் விவகாரம்:

கடந்த 13 மாதங்களாக வன்முறையின் பிடியில் மணிப்பூர் உள்ளது. ஆனால், அந்த மாநிலத்திற்கு செல்ல மோடி முனைப்பு காட்டவில்லை. அங்கு நடந்து வரும் புதிய வன்முறை சம்பவங்கள் குறித்து தனது உரையில் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, விலைவாசி உயர்வு, வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு, கருத்துக்கணிப்பு - பங்குச் சந்தை ஊழல் என அனைத்திலும் மோடி அமைதி காத்து வருகிறார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் மோடி அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூட பிரதமர் மோடி முற்றிலும் மவுனம் காக்கிறார்.

நரேந்திர மோடி நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால் முடிவுக்கு வந்துள்ளது. மோடிக்கு எதிராக மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் அவர் பணியாற்ற வேண்டும்.

"மக்களுக்கு உபயோகமான விஷயங்களே தேவை, கோஷங்கள் அல்ல" என பிரதமர் சொல்கிறார். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள். எதிர்க்கட்சிகளும் இந்திய மக்கள் கூட்டணியும் நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை விரும்புகின்றனர்.

 

நாங்கள் மக்களவையில், தெருக்களில் மற்றும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget