மேலும் அறிய

இடைத்தேர்தல் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு - எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.

 


இடைத்தேர்தல் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு - எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தான் இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். 

 


இடைத்தேர்தல் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு - எம்.ஆர். விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, “கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்தும், 30 ஆண்டுகள் ஆண்ட இயக்கம் அதிமுக. பல சோதனைகளை கடந்து 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு கட்சி 2ஆக உடைந்தது. தலைவருக்குப் பிறகு அம்மா கட்டி காத்து எஃகு கோட்டையாக மாற்றினார். மைனாரிட்டி அரசு என்றால் அது திமுக தான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பினிக்ஸ் பறவை போல் மீண்டும், மீண்டும் எழுந்த இயக்கம் அதிமுக. அம்மாவின் அரசை தொடர்ந்து எடப்பாடியார் வழி நடத்தி 78 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள் என்றால் அதான் அதிமுக. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கருணாநிதி குழந்தைகளை தட்டு எந்த வைத்து விட்டார்” என விமர்சித்தார்.
 


இடைத்தேர்தல் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு - எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

மேலும், “நம்மிடம் இருந்து போன துரோகிகள் போகாமல் இருந்தால் மூன்றாவது முறையாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தான் இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும் போது கருணாநிதி பக்தன் என்று சொல்கிறார். இப்போது அவரை இயக்குவதை திமுக தான், ஓபிஎஸ் மகன் எம்பி ஆகின்றார் அவர் ஸ்டாலினை பார்த்து சொல்கிறார் நல்லாட்சி நடத்துகின்றார்கள் என்று கூறுகின்றார். அப்போது எப்படி அதிமுக நிர்வாகி என்று சொல்லலாம், 24 மணி நேரம் மருத்துவமனை இருக்கின்றது அந்த மாதிரி இந்திய துணை கண்டத்தில் 24 மணி நேரமும் சாராய விற்பனை செய்யும் முறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் கோவலன் என்று ஒருவர் இருந்தார் தப்பாடித்துக் கொண்டு இருப்பார் இப்போது அவர் எங்கு போனார் என்று கூட தெரியவில்லை” என்று கூறினார்.


ஊராளி கவுண்டர் சங்க மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க, மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், காந்திகிராமத்தில் நடந்தது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும், தேர்தலை தேர்வு குழு தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடத்துவது, மாநில பொதுக்குழு கூட்டத்தை வரும் ஏப்ரல் 5 நடத்துவது, என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தேர்வு குழு தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
Embed widget