மேலும் அறிய

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் ஏகமனதாக பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்த ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அதிமுக வரலாற்றின் ஒற்றை தலைமைக்கு அதிகார போட்டி நடைபெற்று வந்த நிலையில், அதிக பெரும்பான்மையுடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்றைய செயற்குழு, பொதுக்குழு தீர்மானத்தில் ஏக மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக, அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது


அதே நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகள் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட அதிமுக நிர்வாகி இடையே சலசலப்பு, சண்டைக்கு காயமுற்றோரை முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதேபோல், ஓபிஎஸூம் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனையில்  ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் புதிதாக பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்பொழுது, சிலை அருகே கல்வெட்டு பதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது, அந்த கல்வெட்டில் சிலை திறப்பாளர் முதலமைச்சர்  எடப்பாடி  கே.பழனிசாமி என்ற பெயரும்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  என்ற பெயரும், அதன் கீழே மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் வி.சி.கே ஜெயராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் என்ற பெயரும் இடம்பெற்று இருந்தது.


கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

 

பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக வடக்கு செயலாளராக இருந்த பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, அந்த கல்வெட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஒற்றை தீர்மானத்தின் படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவருடன் சில அதிமுக நிர்வாகிகளையும் நீக்குவதாக அறிவித்தார். அவர் அறிவிப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை மாவட்ட அலுவலகத்தில் இருந்த படங்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில்  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் வைத்து இருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் பெயர் மற்றும் பதவி கருப்பு ஸ்டிக்கரால் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

ஆனால், அந்த கல்வெட்டில் வடக்கு நகர அதிமுக செயலாளர் பாண்டியன் என்ற பெயரை முழுமையாக நீக்கி உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
"விளம்பர வெறி.. அருவருப்பு.. ஏற்கவே முடியாது.." அமைச்சர் கீர்த்தனாவிற்கு உதயநிதி கண்டனம்
ஊழல் குற்றச் சாட்டுகளுடன் தவெக-வில் இணைபவர்கள் 'தூய சக்தி' அல்ல - மாணிக்கம் தாகூர்
ஊழல் குற்றச் சாட்டுகளுடன் தவெக-வில் இணைபவர்கள் 'தூய சக்தி' அல்ல - மாணிக்கம் தாகூர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget