மேலும் அறிய

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் ஏகமனதாக பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்த ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அதிமுக வரலாற்றின் ஒற்றை தலைமைக்கு அதிகார போட்டி நடைபெற்று வந்த நிலையில், அதிக பெரும்பான்மையுடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்றைய செயற்குழு, பொதுக்குழு தீர்மானத்தில் ஏக மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக, அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது


அதே நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகள் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட அதிமுக நிர்வாகி இடையே சலசலப்பு, சண்டைக்கு காயமுற்றோரை முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதேபோல், ஓபிஎஸூம் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனையில்  ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் புதிதாக பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்பொழுது, சிலை அருகே கல்வெட்டு பதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது, அந்த கல்வெட்டில் சிலை திறப்பாளர் முதலமைச்சர்  எடப்பாடி  கே.பழனிசாமி என்ற பெயரும்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  என்ற பெயரும், அதன் கீழே மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் வி.சி.கே ஜெயராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் என்ற பெயரும் இடம்பெற்று இருந்தது.


கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

 

பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக வடக்கு செயலாளராக இருந்த பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, அந்த கல்வெட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஒற்றை தீர்மானத்தின் படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவருடன் சில அதிமுக நிர்வாகிகளையும் நீக்குவதாக அறிவித்தார். அவர் அறிவிப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை மாவட்ட அலுவலகத்தில் இருந்த படங்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில்  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் வைத்து இருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் பெயர் மற்றும் பதவி கருப்பு ஸ்டிக்கரால் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

ஆனால், அந்த கல்வெட்டில் வடக்கு நகர அதிமுக செயலாளர் பாண்டியன் என்ற பெயரை முழுமையாக நீக்கி உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget