மேலும் அறிய

சமூக வலைதளங்களில் வந்த புகார்...! அதிகாரிகளுடன் களத்தில் இறங்கிய காஞ்சி எம்எல்ஏ...!

Kanchipuram MLA : " மழையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார் "

பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்கும் தகவலை சமூக வலைதளங்களின் மூலம் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி, கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
 
 
காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை 
 
காஞ்சிபுரம் ( Kanchipuram Rain ) : காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, பேருந்து நிலையம், செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலையில் ஓரமாக மழை நீர் செல்லாமல் கழிவுநீருடன் ஆங்காங்கே நீர் தேங்கியும் வருகிறது.
 
பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்குவதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்குவதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
 
 
சமூக வலைத்தளத்தில் எழுந்த புகார்
 
இந்நிலையில் தொடர்ந்த பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் டாக்டர்.பி.எஸ். ஸ்ரீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி, கொசுக்கள் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை டேக் செய்து பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
 
 காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட ஆய்வின்போது உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட ஆய்வின்போது உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்
 
 
 
களத்தில் இறங்கிய சட்டமன்ற உறுப்பினர்
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பள்ளியின் மைதானத்தில் அதிக மழை நீர் தேங்கி அசத்தும் ஏற்பட்டு வரும் செய்தி பரவி வருவதை அடுத்து, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதுபோன்று மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் சி.பி எம் பி எழிலரசன் கேட்டுக் கொண்டார். 
 
சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியை ஈடுபட்டனர்
சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியை ஈடுபட்டனர்
 
 
மழையும் பொருட்படுத்தாமல் ஆய்வு
 
சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது , திடீரென மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல், சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு பள்ளமாக இருக்கும் பகுதிகளில் மண்ணை கொட்டி நிரப்பி சமப்படுத்தி, இனி மழை தண்ணீர் தேங்காத அளவிற்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மழையும் பொருட்படுத்தாமல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget